சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் 2026 நிறைவடைந்து, மே 04ம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இதுவரை வெளியான மீடியாக்களின் கணிப்புப்படி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். இதனால் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி எந்த ஒரு கட்சிகோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்காமல் போனால் என்ன நடக்கும்? அரசியல் சாசன சட்டத்தின் படி என்ன நடைமுறை? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தமிழக சட்டசபையில் இருக்கும் 234 இடங்களில் பெரும்பான்மை பெறுவதற்கு 117+1= 118 (மொத்த தொகுதிகளில் பாதிக்கும் மேல்) பெற வேண்டும். தமிழக சட்டசபை தேர்தலில் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கோ ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டால் அது'தொங்கு சட்டசபை' (Hung Assembly) என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய அசாதாரண சூழலில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த அரசியலமைப்பு ரீதியான சட்ட நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஆளுநரின் தனிச்சிறப்பு அதிகாரம் :

சட்டமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 164-ன் கீழ் ஆளுநர் தனது 'விருப்ப அதிகாரம்' (Discretionary Power) மூலம் முடிவெடுப்பார். ஒரு நிலையான ஆட்சியை வழங்கக்கூடிய நபர் யார் என்பதைக் கண்டறிவதே ஆளுநரின் முதன்மைப் பணியாகும். இதற்காக அவர் பின்வரும் வரிசை முறையைப் பின்பற்ற வாய்ப்புள்ளது:
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி: தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணி அதிக இடங்களைப் பெற்றிருந்தால், அவர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படும்.
தனிப்பெரும் கட்சி: மிக அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியின் தலைவரை அழைத்து ஆட்சி அமைக்கக் கோரலாம்.
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி: பல கட்சிகள் இணைந்து பெரும்பான்மையை (118 இடங்கள்) உறுதி செய்தால், அந்தக் கூட்டணியை ஆளுநர் அழைக்கலாம்.
நம்பிக்கை வாக்கெடுப்பு (Floor Test) :
ஆளுநரால் முதலமைச்சராக நியமிக்கப்படுபவர், ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் (பொதுவாக 15 நாட்கள் அல்லது ஆளுநர் நிர்ணயிக்கும் காலம்) சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இது 'நம்பிக்கை வாக்கெடுப்பு' என்று அழைக்கப்படும். இதில் வெற்றி பெற்றால் ஆட்சி தொடரும்; தோற்றால் அந்த அரசு உடனடியாகப் பதவி விலக நேரிடும்.
பிற வாய்ப்புகள் மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சி :
ஒருவேளை எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை என்றாலோ அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைவரும் தோல்வியடைந்தாலோ ஆளுநர் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்:
1. சட்டசபையை முடக்கி வைத்தல்: சிறிது காலம் சட்டசபையைச் செயல்பட விடாமல் நிறுத்தி வைத்து, கட்சிகள் பேச்சுவார்த்தை மூலம் கூட்டணி அமைக்க வாய்ப்பு வழங்குவது.
2. குடியரசுத் தலைவர் ஆட்சி: அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 356-ன் கீழ், மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் சீர்குலைந்துவிட்டது என ஆளுநர் அறிக்கை அளித்தால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம்.
3. மறுதேர்தல்: நிலையான ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்ற சூழலில், சட்டசபையைக் கலைத்துவிட்டு மீண்டும் ஒரு தேர்தலை நடத்த ஆளுநர் பரிந்துரைப்பார்.
Exit Poll கலாட்டாக்கள்: "நாலு மே வரட்டும்".. முடியலையே.. முடியலையேடா!
தென்றலே என்னைத் தொடு.....!
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?
5 மாநில சட்டசபை தேர்தல் 2026: இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Deepa Ravi Poem: பரந்து விரிந்த வானம்.. வியந்து தான் போகிறேன்!
சர்வதேச நடன தினம் 2026: கலை உலகில் காலடி எடுத்து வைக்கும் இளம் தாரகை வேதா ஸ்ரீ
செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவு
Tamil Nadu: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்.. மாணவர் சேர்க்கை 1 லட்சத்தைத் தாண்டி அசத்தல்!
விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?
{{comments.comment}}