தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், பங்குனி 15ம் தேதி சனிக்கிழமை
அமாவாசை. மாலை 05.32 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. இரவு 08.15 வரை உத்திரட்டாதி நட்சத்திரம், பிறகு ரேவதி நட்சத்திரம் உள்ளது. இரவு 08.15 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - மகம், பூரம்
இன்றைய ராசிபலன் :

மேஷம் - குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வரவுக்கு ஏற்ற செல்வு இருக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நட்பு நிறைந்த நாள்.
ரிஷபம் - சகோதர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். அனுகூலம் ஏற்படும் நலம் நிறைந்த நாளாக இருக்கும்.
மிதுனம் - வியாபாரத்தில் புதிய அறிமுகம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் தெளிவுகள் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். நீதித்துறையில் புதிய அனுபவம் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண வரவுகள் கிடைக்கும்.
கடகம் - நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.
சிம்மம் - பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் குழப்பம் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.
கன்னி - மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
துலாம் - செயல்களில் அனுபவ அறிவு வெளிப்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். அரசு தொடர்பான நிலைப்பாடுகள் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். தடங்கல் விலகும் நாளாக இருக்கும்.
விருச்சிகம் - வியாபாரத்தில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சமயோசிதமாக செயல்பட்டு நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய நிலம், சொத்துக்கள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.
தனுசு - மனதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். குடும்ப விஷயங்களுக்காக அலைச்சல் ஏற்படும். நிலுவையில் இருந்த பண வரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
மகரம் - எதிலும் ஈடுபாடுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வரவுகள் போதிய அளவு இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சகோதர வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தாமதமான நாள்.
கும்பம் - பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுப செலவு அதிகரிக்கும். செயல்பாடுகளில் தனித்திறமை வெளிப்படும். கொடுக்கல், வாங்கலில் உண்டான சங்கடம் தீரும். இன்பம் நிறைந்த நாளாக இருக்கும்.
மீனம் - எதிலும் பொறுமையுடன் செயல்படவும், உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலக ரகசியங்களில் கவனம் வேண்டும். வரவுகள் நிறைந்த நாளாக இருக்கும்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}