சென்னை: கரூர் சம்பவத்தால் வீட்டோடு முடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், சமீபத்தில் கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து பேசினார். இந்த நிலையில் அடுத்தடுத்த அரசியல் பணிகளில் அவர் இறங்கவுள்ளதால் தவெக தொண்டர்களிடையே புதிய நம்பிக்கையும், உற்சாகமும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெற்றிக் கழகம் தலைவர் விஜய், நவம்பர் 5 ஆம் தேதி மாமல்லபுரத்தில் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள், வரவிருக்கும் செயல்பாடுகள், கட்சியின் எதிர்கால திட்டங்கள், மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பு, ஒரு மாதத்திற்கு முன்பு கரூர் அருகே நடந்த விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவத்திற்குப் பிறகு வந்துள்ளது. அந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, கட்சி ஒரு வார காலத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தியதுடன், பொது நிகழ்ச்சிகளையும் குறைத்துக் கொண்டது. தற்போது விஜய் மீண்டும் ஆக்கப்பூர்வமான அரசியலுக்குத் திரும்புவதால் கட்சியினர் மத்தியில் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், விஜய், "சதி செய்பவர்கள் மற்றும் சூழ்ச்சிக்காரர்கள்" கட்சியைக் குறைத்து மதிப்பிடவும், அவதூறு பரப்பவும் முயன்றாலும், தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக அவர்களுடன் நிற்பதாகக் கூறினார். "நமது தாய்நாடான தமிழ்நாட்டின் மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது" என்றும், மக்களின் ஆதரவு வலுவாக இருக்கும் வரை கட்சியின் பயணத்தை நிறுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய், உறுப்பினர்களை அடுத்த கட்ட நடவடிக்கைகளை "கவனத்துடனும், கணக்குடனும், தெளிவாகவும்" எடுக்க வலியுறுத்தினார். மேலும், சிறப்பு கூட்டத்தில் ஒற்றுமையுடன் கூடி எதிர்காலத்திற்காக உறுதியான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த அறிவிப்பு, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் விஜய் தரப்புப் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியமாகும். அது நடந்தால்தான் விஜய்யின் அரசியல் பாதை எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்
எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி
எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்
ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறை ஊழியர்கள் தபால் ஓட்டு போடலாம்
கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
புதுச்சேரி கூட்டணி விவகாரம்...டில்லியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை
ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
{{comments.comment}}