சென்னை: இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம். இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக எப்போதும் இருப்போம் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வக்பு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வக்பு வாரிய திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதவிற்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நேற்று தவெக தரப்பிலும் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயக அவையில் வக்பு வாரிய திருத்த மசோதா பற்றி விவாதிக்க போதுமான இஸ்லாமியர் உறுப்பினர்கள் இல்லை. இது தான் பாஜக அரசு நிறுவியுள்ள மிக மோசமான பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல். அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வக்பு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சென்னை பனையூரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். வந்தோம், போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்.
வக்பு சொத்துகளில் ஏன் மத்திய அரசு தலையிட வேண்டும். பாஜக செய்வது அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பாக உள்ளது. இந்த சட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இஸ்லாமியர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் அச்சம் தவெகவிற்கு நன்றாக தெரியும். இந்த சட்ட மசோதவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். மக்கள் தேர்ந்தெடுத்த அரசு மக்கள் விரும்பப்படி தான் செயல்பட வேண்டும். இஸ்லாமியர்களுக்கு தவெக உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}