கற்ற கல்வி உதவுமா?

Apr 25, 2026,04:38 PM IST

- வே. ஜெயந்தி


கற்ற கல்வி உதவுமா?

என்ன கேள்வி அது மனிதனே!


கண் போலவே கல்வியும்

வாழ்க்கைக்கு ஒளி தருமே.


கண் மூடினால் உலகம் முழுவதும்

இருள் சூழ்ந்ததாய் தோன்றுமே;


கல்வி இல்லா மனம் ஒருநாள்

தவறான பாதை சென்றிடுமே.


கண் திறந்தால் வழி தெரியும்,

கல்வி கற்றால் உண்மை தெரியும்;




அறிவின் ஒளி உள்ளம் நுழைந்து

அச்சம் அனைத்தும் அகன்றிடும்.


செல்வம் இன்று வரும் போகும்,

புகழும் நாளை மாறிடும்;


கற்ற கல்வி கைவிடாது

காலம் முழுவதும் காத்திடும்.


கண் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்,

அவ்வளவே கல்வி வாழ்க்கைக்கு;


அறிவின் தீபம் ஏந்தியவனுக்கு

இருள் எதற்கு? பயம் எதற்கு? 


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்