கற்ற கல்வி உதவுமா?

Apr 25, 2026,04:38 PM IST

- வே. ஜெயந்தி


கற்ற கல்வி உதவுமா?

என்ன கேள்வி அது மனிதனே!


கண் போலவே கல்வியும்

வாழ்க்கைக்கு ஒளி தருமே.


கண் மூடினால் உலகம் முழுவதும்

இருள் சூழ்ந்ததாய் தோன்றுமே;


கல்வி இல்லா மனம் ஒருநாள்

தவறான பாதை சென்றிடுமே.


கண் திறந்தால் வழி தெரியும்,

கல்வி கற்றால் உண்மை தெரியும்;




அறிவின் ஒளி உள்ளம் நுழைந்து

அச்சம் அனைத்தும் அகன்றிடும்.


செல்வம் இன்று வரும் போகும்,

புகழும் நாளை மாறிடும்;


கற்ற கல்வி கைவிடாது

காலம் முழுவதும் காத்திடும்.


கண் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்,

அவ்வளவே கல்வி வாழ்க்கைக்கு;


அறிவின் தீபம் ஏந்தியவனுக்கு

இருள் எதற்கு? பயம் எதற்கு? 


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்