- வே. ஜெயந்தி
கற்ற கல்வி உதவுமா?
என்ன கேள்வி அது மனிதனே!
கண் போலவே கல்வியும்
வாழ்க்கைக்கு ஒளி தருமே.
கண் மூடினால் உலகம் முழுவதும்
இருள் சூழ்ந்ததாய் தோன்றுமே;
கல்வி இல்லா மனம் ஒருநாள்
தவறான பாதை சென்றிடுமே.
கண் திறந்தால் வழி தெரியும்,
கல்வி கற்றால் உண்மை தெரியும்;

அறிவின் ஒளி உள்ளம் நுழைந்து
அச்சம் அனைத்தும் அகன்றிடும்.
செல்வம் இன்று வரும் போகும்,
புகழும் நாளை மாறிடும்;
கற்ற கல்வி கைவிடாது
காலம் முழுவதும் காத்திடும்.
கண் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்,
அறிவின் தீபம் ஏந்தியவனுக்கு
இருள் எதற்கு? பயம் எதற்கு?
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}