- வே. ஜெயந்தி
கற்ற கல்வி உதவுமா?
என்ன கேள்வி அது மனிதனே!
கண் போலவே கல்வியும்
வாழ்க்கைக்கு ஒளி தருமே.
கண் மூடினால் உலகம் முழுவதும்
இருள் சூழ்ந்ததாய் தோன்றுமே;
கல்வி இல்லா மனம் ஒருநாள்
தவறான பாதை சென்றிடுமே.
கண் திறந்தால் வழி தெரியும்,
கல்வி கற்றால் உண்மை தெரியும்;

அறிவின் ஒளி உள்ளம் நுழைந்து
அச்சம் அனைத்தும் அகன்றிடும்.
செல்வம் இன்று வரும் போகும்,
புகழும் நாளை மாறிடும்;
கற்ற கல்வி கைவிடாது
காலம் முழுவதும் காத்திடும்.
கண் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்,
அறிவின் தீபம் ஏந்தியவனுக்கு
இருள் எதற்கு? பயம் எதற்கு?
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}