- பாவை.பு
எம் பெருமான் நாராயணனை வழிபாடு செய்வதற்கு பல விரத நாட்கள் இருந்தாலும் அதில் மிகவும் சிறப்புக்குரியது, ஏகாதசி திருநாள். இந்த ஏகாதசி மாதeமாதம் வந்தாலும், மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் கூறிய, சிறப்பான மாதமான மார்கழியில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி ஆகும்.
இந்நாளில் தான் பகவான் ஸ்ரீ வைகுண்ட நாதனே பரமபத வாசலை (சொர்க்க வாசல்) திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
மஹாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டதால் பரமபத பாக்கியம் பெற்றவர்கள் மது கைடபர் என்ற இரு அசுரர்கள். தங்களுக்கு கிடைத்த வைகுண்ட பேறு உலக மாந்தர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

எனவே வைகுண்ட ஏகாதசி அன்று திருவரங்கம் வடக்கு வாசல் வழியாக அர்ச்சாவதாரத்தில் (உற்சவ மூர்த்தியாக) தாங்கள் வெளி வரும் போது, தங்களை தரிசித்து பின்தொடர்ந்து வரும் பக்தர்களுக்கு பாவங்களை போக்கி முக்தி அளிக்க வேண்டும் என்று பெருமாளிடம் பிரார்த்தித்தனர். அப்படியே அருள் செய்தார் பெருமாள். இதன் பொருட்டே சொர்க்க வாசல் திறந்து மோட்சத்திற்கு வழி காட்டுகிறார் திருமால் என்கின்றன ஞான நூல்கள்.
இந்த புனிதமான நாளில் நாம் தெரியாமல் செய்த பாவங்களை இறைவனிடத்தில் கண்ணீர் மல்கி உள்ளம் உருகி தவறுகளை மன்னித்தருளும்படி வேண்டிக்கொள்ளும் போது நாராயணன் நிச்சயமாக நமது பாவங்களை போக்கி நற்கதியை பெற்று தருவார் என்பதும், மாதந்தோறும் வரும் ஏகாதசியன்று விரதம் இருக்க முடியாதவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரும் வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்களுக்கு நிச்சயமாக நாராயணனின் அருள் கிடைக்கும் என்பதும் ஆழ்வார்களின் வாக்கு.
ஒருசமயம் பார்வதி தேவி சிவபெருமானிடத்தில் விரதத்திலே சிறந்த விரதம் எது என்று கேட்க, அதற்கு எம் பெருமான் ஏகாதசி விரதமே சிறந்தது என்றும் இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள் என்றும் கூறினாராம். இதிலிருந்து இந்த விரதத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.
இந்த வருடம் ஏகாதசி விரதம் டிசம்பர் 30(மார்கழி 15) அன்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முந்தைய திதியான தசமி நாளில் ஆரம்பித்து அன்று இரவு உணவு உண்ணாமல் மறுநாள் ஏகாதசியன்று முழுவதும் (சுத்தப்பட்ணி ) விரதமாக இருந்து. அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு பாரத்து, அன்று பகல் இரவு முழுவதும் தூங்காமல் நாராயணனின் பாசுரங்களை பாராயணம் செய்ய வேண்டும். மறுநாள் காலை துவாதசி அன்று விரதத்தை நிறைவு செய்வது சிறப்பு.
இந்த வருடத்தின் தசமி திதியானது 29.12.25 அதிகாலை 4.42 மணி முதல் 30.12.25 அதிகாலை 3.50 மணி வரை உள்ளது. ஏகாதசி திதி 30.12.25 (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.51 மணி முதல் 31.12.25 அதிகாலை 1.34 மணி வரை உள்ளது. துவாதசி திதி 31.12.25 அதிகாலை 1.35 மணி முதல் இரவு 11.16 மணி வரை உள்ளது.
தூங்க கூடாத நாள் செவ்வாய் கிழமை இரவு முழுவதும்.
எல்லா வைணவ திவ்யதேச தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் சிறப்பாக நடைபெற்றாலும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் (திருவரங்கம்) மிகவும் சிறப்பாக பரமபதம் திறக்கப்படுகிறது.
இங்கு சொர்க்கவாசல் திறக்கும் நேரம் 30.12.25 அதிகாலை 4.30 -5.45 க்குள் சாமி புறப்பட்டு சொர்க்க வாசல் வழியாக பக்தர்களையும் அழைத்து அருள் பாலிக்கிறார். பக்தன் என்ன சொல்கிறான் என்று பகவான் கேட்டு, பகவானே பக்தர்களுக்காக இறங்கி வந்து அருள் புரிகிற நாளாக இந்நாள் அமைகிறது.
(பாவை.பு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்
2026ம் ஆண்டு என்ன நடக்கும்?...பாபா வாங்காவின் பகீர் கிளப்பும் கணிப்புகள்
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ரூ.332.77 கோடி வருமானம்
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு
மலேசியா என்றதும் இனி பிரகாஷ் ராஜ் ஞாபகமும் வரும்.. பார்த்திபன் போட்ட பலே டிவீட்!
மார்கழியில் அரங்கனும் இறங்குவான் அக்காரவடிசலுக்கு.. நாமளும் மயங்குவோம்.. சுவைக்கு!
{{comments.comment}}