Tamil Short Poem: வலை!

Jun 13, 2026,11:21 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


வலையில் தான் இருக்கிறேன்;

என்ன வகையான வலை...

அன்பின் வலையா?

ஆணவ வலையா?


தளர்வான முடிச்சுதான்;

வலிக்கவும் இல்லை.

நேரம் ஆக ஆக

உறுத்தும் உறுத்தல்

மனத்தைத் தான் உறுத்துகிறது; மிகவும். 




காலில் ஒரு கட்டு.

ஒரு காலில் மட்டும்.

நடக்க இயலும்,

தன் இச்சையில் 

ஓட இயலாது.

இருந்த இடத்தில் 

சுற்றி வரலாம்.

வெறுப்பாய் இருக்கிறது;

வெறுமே சுற்றி வர.


எந்த வலையானாலும்

அதுவே  நெக்கு விட

காத்திருக்கிறேன்.

கத்தி கொண்டு  வெட்டி விட்டு 

வெளியேற மனமின்றி...


அன்பின் வலைதானோ?

அன்றி;

ஆணவ வலைதானோ?

ஆராய மனம் துணியாமல் 

நான் என்றும் போல்

ஊமையாய், மௌனத்தில்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்