Tamil Short Poem: வலை!

Jun 13, 2026,11:21 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


வலையில் தான் இருக்கிறேன்;

என்ன வகையான வலை...

அன்பின் வலையா?

ஆணவ வலையா?


தளர்வான முடிச்சுதான்;

வலிக்கவும் இல்லை.

நேரம் ஆக ஆக

உறுத்தும் உறுத்தல்

மனத்தைத் தான் உறுத்துகிறது; மிகவும். 




காலில் ஒரு கட்டு.

ஒரு காலில் மட்டும்.

நடக்க இயலும்,

தன் இச்சையில் 

ஓட இயலாது.

இருந்த இடத்தில் 

சுற்றி வரலாம்.

வெறுப்பாய் இருக்கிறது;

வெறுமே சுற்றி வர.


எந்த வலையானாலும்

அதுவே  நெக்கு விட

காத்திருக்கிறேன்.

கத்தி கொண்டு  வெட்டி விட்டு 

வெளியேற மனமின்றி...


அன்பின் வலைதானோ?

அன்றி;

ஆணவ வலைதானோ?

ஆராய மனம் துணியாமல் 

நான் என்றும் போல்

ஊமையாய், மௌனத்தில்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

அதிகம் பார்க்கும் செய்திகள்