Rose day 2025.. காதல் ரோஜாவே.. அற்புதமான காதலை தொடங்குங்கள்.. ஒரு அழகிய ரோஜாவுடன்!

Feb 07, 2025,10:16 AM IST

சென்னை: அன்பே ஆருயிரே காதலில் அடி எடுத்து வைக்கும் உன்னை நான் வரவேற்கிறேன். அந்த இனிய நாளான இன்று ரோஸ் டேவில் எனது அன்பை பரிமாறுகிறேன்... என்னங்க பயந்துட்டீங்களா.. அட இன்னில இருந்து காதலர் தினம் தொடங்குங்க.. இன்னிக்கு என்ன நாள்.. ரோஜா தினம்.. சூப்பரான ரோஜாவுடன், சுப்ரீமாக காதலர் வாரத்தைத் தொடங்கலாம் வாங்க.


காதல தின ஒரு வார கொண்டாட்டத்தில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 7ம் தேதி ரோஸ்டே கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான காதலர் தின  கொண்டாட்டத்தில் முதல் நாளான இன்று ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. காதலில் அழகான, தூய்மையான அன்பை வெளிப்படுத்தும் தொடக்க நாளாகவும் கருதப்படுகிறது. 


ஆயிரம் வண்ணங்களில் ரோஜா பூக்கள் இருந்தாலும் காதலர் தினத்தில் முக்கியமாக கருதப்படும் சிவப்பு நிற ரோஜாவுக்கென்று தனி மகத்துவம் உண்டு. ஒவ்வொரு வண்ணமும் அதன் குணத்தையும் மனத்தையும் பறைசாற்றும். அந்த வகையில் சிவப்பு நிற ரோஜா அன்பையும் மகிழ்ச்சியையும்.. மஞ்சள் நிற ரோஜா நட்பையும்.. வெள்ளை நிற ரோஜா தூய்மையையும் ஒற்றுமையையும்.. பிரதிபலிக்கின்றன.




அதனால்தான் காதல் சின்னமாக ரோஜா பூக்கள் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது ரோஜாவுக்கும் காதலுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. அது என்னவென்றால் ரோஜாப்பூவை நம் பார்த்ததும் நம் கண்களுக்கும் மனதிற்கும் இனம் புரியாத ஏதோ சந்தோஷமும்  பரவசமும் வெளிப்படும். அதாவது  அழகான மென்மையான இதழ்களை கொண்ட சிவப்பு ரோஜாவை, எப்படி முட்கள் கொண்ட காம்பில் இருந்து பக்குவமாக பிரித்து எடுக்கிறோமோ.. அதேபோல எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை உடைத்து எறிந்து அன்பின் அடையாள தினமாக இருக்கும் இன்று உன்னை ஏற்கிறேன். ரோஜா பூவின் இதழ்கள் எவ்வளவு மென்மையானதோ.. அதேபோன்று மென்மையான காதலியின் கரம் பற்றி நம் அன்பு மட்டுமே என்றும் நிலைத்து நிற்கும் என்பதை வெளிப்படுத்தும் அழகான தருணம் இன்று. 


நண்பர்களாக இருந்து காதலர்களாக அடி எடுத்து வைக்கும்  ரோஸ் டே அன்று காதலன் காதலியிடம் ஒற்றை சிவப்பு ரோஜாவை கொடுப்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..? நாம் இருவரும் சமம். நம் வாழ்நாள் மாறும் வழியில் தைரியமாக அன்பை பரிமாற அடியெடுத்து வைக்கும் தருணம் இது. வாழ்நாளில் இறுதிவரை நீடிக்கும் அழகான தருணம் இன்று பெண்ணே.. என்று காதலன் காதலியிடம் சிவப்பு ரோஜாவை நீட்டி அன்பை ஏற்பார். இருமனம் இணையும் திருமணத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதைப் போல அதற்கு முன்பு வரும் காதலிலும் முன்பு வரை  எப்படியோ இனிமேல் நாம் இருவரும் அன்பை பரிமாறிக் கொண்டு ஒன்றாக இணைந்து வாழ்வோம் என்பதை பறைசாற்றவே ரோஸ் டேவில் ரோஜாக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்..!


ஆகவே இந்த ரோஸ் டேவில் அழகாக, மிக ஆழமான உணர்வான அன்பை வெளிப்படுத்தி காதலர் வார கொண்டாட்டத்தில் அடி எடுத்தும் வைக்கும் காதலர்களுக்கும் நண்பர்களுக்கும் ரோஸ் டே வாழ்த்துக்கள்..!


ஏற்கனவே காதலித்து திருமணமான ஜோடிகளும் கூட இன்று ரோஜாக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.. தப்பில்லை!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்