- முனைவர் கோ.லதா
நாவெனும் கூர்வாள் நல்லதோ கேடோ
நவிலும் சொல்லினால் நன்மையோ தீமையோ
வீண்சொல் விளையாடி வாயினில் வார்த்தால்
விளைவது துன்பமே விதிபோல் வந்திடும்
சொல்லுக்கு அடக்கம் சூடிடு மனமே
சோதித்து பேசிடு சுடுசொல் வேண்டாம்
பிறர்மனம் புண்பட பேசிடல் பாவம்
பெரியோர் கூற்றிது பேணிடு நன்றே
கோள்சொல்லி குற்றமும் கூறிடல் தீது
கொதித்தெழும் சினத்தால் குலைந்திடும் வாழ்வு
இன்சொல் பேசிடு இதயம் குளிரும்
ஈகையாய் சொல்லிடில் ஏற்றம் தந்திடும்
வாய்சொல் வராமல் வஞ்சமாய் காப்பாய்
வழுவின்றி வாழ்ந்திட வாய்ப்பிது ஒன்றே
நல்லதை நினைத்திடு நாவினில் நவிலு
நன்மை செய்யும் நாளும் நாளும்

பொய்சொல் புகலிடம் பொல்லாங்கு தரும்
புன்சொல் கேட்டிடில் புண்ணாகும் நெஞ்சம்
உண்மை உரைத்திடு உள்ளம் உயரும்
உலகம் போற்றிடும் உத்தமன் என்றே
வீண்சொல் தவித்திடு வாழ்வு வளரும்
வான்புகழ் சேர்ந்திடும் வையகம் முழுதும்
நாவினை காத்திடு நல்லறம் வளர்க்க
நாளையும் வாழ்ந்திடு நன்மையின் நிழலில்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}