வீண் சொல் தவிர்த்திடு

Jun 11, 2026,03:37 PM IST

- முனைவர் கோ.லதா

 

நாவெனும் கூர்வாள் நல்லதோ கேடோ 

நவிலும் சொல்லினால் நன்மையோ தீமையோ

வீண்சொல் விளையாடி வாயினில் வார்த்தால்

விளைவது துன்பமே விதிபோல் வந்திடும் 


சொல்லுக்கு அடக்கம் சூடிடு மனமே

சோதித்து பேசிடு சுடுசொல் வேண்டாம் 

பிறர்மனம் புண்பட பேசிடல் பாவம்

பெரியோர் கூற்றிது  பேணிடு நன்றே


கோள்சொல்லி குற்றமும் கூறிடல் தீது 

கொதித்தெழும் சினத்தால் குலைந்திடும் வாழ்வு

இன்சொல் பேசிடு இதயம் குளிரும்

ஈகையாய் சொல்லிடில் ஏற்றம் தந்திடும்


வாய்சொல் வராமல் வஞ்சமாய் காப்பாய்

வழுவின்றி வாழ்ந்திட வாய்ப்பிது ஒன்றே

நல்லதை நினைத்திடு நாவினில் நவிலு 

நன்மை செய்யும் நாளும் நாளும்




பொய்சொல் புகலிடம் பொல்லாங்கு தரும் 

புன்சொல் கேட்டிடில் புண்ணாகும் நெஞ்சம்

உண்மை உரைத்திடு உள்ளம் உயரும் 

உலகம் போற்றிடும் உத்தமன் என்றே


வீண்சொல் தவித்திடு வாழ்வு வளரும்

வான்புகழ் சேர்ந்திடும் வையகம் முழுதும்

நாவினை காத்திடு நல்லறம் வளர்க்க

நாளையும் வாழ்ந்திடு நன்மையின் நிழலில்


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

news

தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!

news

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

news

தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்

news

டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா

news

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி

அதிகம் பார்க்கும் செய்திகள்