வீண் சொல் தவிர்த்திடு

Jun 11, 2026,03:37 PM IST

- முனைவர் கோ.லதா

 

நாவெனும் கூர்வாள் நல்லதோ கேடோ 

நவிலும் சொல்லினால் நன்மையோ தீமையோ

வீண்சொல் விளையாடி வாயினில் வார்த்தால்

விளைவது துன்பமே விதிபோல் வந்திடும் 


சொல்லுக்கு அடக்கம் சூடிடு மனமே

சோதித்து பேசிடு சுடுசொல் வேண்டாம் 

பிறர்மனம் புண்பட பேசிடல் பாவம்

பெரியோர் கூற்றிது  பேணிடு நன்றே


கோள்சொல்லி குற்றமும் கூறிடல் தீது 

கொதித்தெழும் சினத்தால் குலைந்திடும் வாழ்வு

இன்சொல் பேசிடு இதயம் குளிரும்

ஈகையாய் சொல்லிடில் ஏற்றம் தந்திடும்


வாய்சொல் வராமல் வஞ்சமாய் காப்பாய்

வழுவின்றி வாழ்ந்திட வாய்ப்பிது ஒன்றே

நல்லதை நினைத்திடு நாவினில் நவிலு 

நன்மை செய்யும் நாளும் நாளும்




பொய்சொல் புகலிடம் பொல்லாங்கு தரும் 

புன்சொல் கேட்டிடில் புண்ணாகும் நெஞ்சம்

உண்மை உரைத்திடு உள்ளம் உயரும் 

உலகம் போற்றிடும் உத்தமன் என்றே


வீண்சொல் தவித்திடு வாழ்வு வளரும்

வான்புகழ் சேர்ந்திடும் வையகம் முழுதும்

நாவினை காத்திடு நல்லறம் வளர்க்க

நாளையும் வாழ்ந்திடு நன்மையின் நிழலில்


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்