-ஸ்வர்ணலட்சுமி.
விஷ்ணுபதி புண்ணிய காலம் :
வைகாசி -1 20 25 மே மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை வைகாசி ஒன்றாம் தேதி பகவான் விஷ்ணுவை மனதார வழிபாடு செய்வதற்கு உகந்த காலம் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம். வருடத்தில் நான்கு நாட்கள் அதாவது வைகாசி- 1 , ஆவணி-1 கார்த்திகை -1 , மாசி -1இந்த நான்கு நாட்கள் விஷ்ணுபதி புண்ணிய காலம் வருகிறது.
வியாழக்கிழமையும் வைகாசி -1 இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் சேர்ந்து வந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நன்னாளில் பெருமாளை வழிபடுபவருக்கு பாவ கணக்குகள் குறையும் என்றும் அவரவர் பாவக்கணக்குகள் குறையும் பட்சத்தில் புண்ணியம் தானாக வந்து சேர துவங்கும். அவ்வாறு புண்ணியம் தானாக சேர துவங்கும்போது காசு, பணம் சேர துவங்கி சேமிப்பு அதிகரிக்கும். பாவங்கள் குறைய குறைய கடனும் அதிவிரைவாக குறைவதை நீங்கள் உணரலாம்.
நேரம் :
மே மாதம் 15ஆம் தேதி இரவு 1:30 மணி முதல் காலை 10 :00மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலம் வருகிறது .எனவே காலை 5 மணியிலிருந்து அருகில் உள்ள பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்வது மிகச் சிறப்பு.
வழிபாடு :
கொடி மரம் இருக்கும் பெருமாள் கோவிலில் கொடி மரத்தோடு சேர்ந்து பெருமாளை வலம் வரும் பொழுது நமக்கு வழிபாட்டின் முழு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பெருமாளை 27 முறை சுற்றி வந்து துளசி மாலைகள் ,வெற்றிலை, பாக்கு ,தேங்காய் பழம் கொடுத்து அர்ச்சனை செய்வது சிறப்பு. ஒவ்வொரு முறை சுற்றி வரும் பொழுதும் 27 பூக்களை கையில் வைத்துக் கொண்டு அந்த பூக்களை கொடி மரத்தில் வைத்து எண்ணிக்கொண்டு மனதார பெருமாளை நினைத்துக் கொண்டு கோவிந்தா நாமம் கூறி வழிபடுவது சிறப்பு.
நான்கு வரி மந்திரம்:
விஷ்ணு சகஸ்ரநாமம்
"ஸ்ரீ ராம ராம ராமே தி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத் துல்யம் ராம நாம வரானனே" இந்த மந்திரம் சொல்லி 27 முறை பெருமாளை வலம் வருவது நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். பெருமாளின் 1008 நாமங்கள் அனைவராலும் சுலபமாக படிக்க இயலாது, எனவே அவரவர் வேலைகளுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப இந்த நான்கு வரி மந்திரம் படிக்க விஷ்ணு சகஸ்ரநாமம் முழுமையாக படித்த புண்ணியம் கிடைக்கும்.
காரியத்தடையில் விலகி சுபிட்சம் பெற :
"ஓம் அனிருத்ரனே நம ஹ" என்னும் மந்திரம் கூறி வழிபாடு செய்யுங்கள். கோவிந்தா !நாராயணா! ஓம் நமோ நாராயணா! என்று கூறி வழிபட நாம் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று நீடூழி வாழ்வோமாக.
மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!
தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!
வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தங்கம் விலை... சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1560 குறைவு!
{{comments.comment}}