நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த கோ ஒர்க்கிங் நிறுவனமான விஒர்க் திவாலாகியுள்ளது. தவறான நிதிக் கொள்கை மற்றும் கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவையே இந்த நிறுவனம் திவாலாக முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
நியூயார்க்கைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம்தான் விஒர்க். ஒரு காலத்தில் படு வேகமாக முன்னேறி வந்த நிறுவனம் இது. 47 பில்லியன் டாலர் வரைக்கும் இதன் சொத்து மதிப்பு ஒரு கட்டத்தில் உயர்ந்தது. ஆனால் நீர்க்குமிழி போல இப்போது அது உடைந்து சிதறி பூஜ்யத்திற்கு வந்து நிற்கிறது.
இந்த நிறுவனம் ஆரம்பத்தில் வெளியிட்ட ஐபிஓ முயற்சிகள் பெரும் குழப்பமாகி விட்டன. இதனால்தான் இந்த நிறுவனம் சரிவைச் சந்திக்க நேரிட்டது. மேலும் இந்த நிறுவனத்தின் கோ ஒர்க்கிங் மாடலும் எடுபடவில்லை. இடையில் வந்த கோவிட் லாக்டவுன் காலத்தின் தாக்கமும் சேர்ந்து கொண்டு நிறுவனத்தை சரித்து விட்டது.

5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிறுவனம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தது. அதன் ஐபிஓக்கள் உலக அளவில் பேசப்பட்டன. ஆனால் இன்று அதன் மதிப்பு பூஜ்யத்தைத் தொட்டு விட்டது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை தற்போது 1 டாலருக்குக் கீழ் போய் விட்டது. தற்போது விஒர்க் நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதிக் கையாள்கையை சரியாக மேற்கொள்ளாமல் போனது, சரியான நிர்வாகத்தை மேற்கொள்ளாதது என்று பல குழப்பங்கள் சூழ்ந்ததால்தான் விஒர்க் நிறுவனம் மூழ்கிப் போயுள்ளது. பலருக்கும் இது நல்ல பாடமாகும்.
அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!
தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி
தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?
தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி
பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!
சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
{{comments.comment}}