நட்பு

Dec 30, 2025,02:14 PM IST
- க. யாஸ்மின்சிராஜூதீன்

நானிருக்கிறேன் என்பதே 
நட்பின் வலிமை ஆகுமே ...
சொந்த பந்தம் இல்லையே 
அனைத்திற்கும் மேலான ஒன்றுதான் 
எதையும் எதிர்பார்ப்பதில்லையே 
அன்பு ஒன்றே  போதுமே ....
மகிழ்ச்சி  அங்கே காணலாம் ..!!!
மனங்களின் புரிதல் நட்புதான் 
வயது என்பது தடையில்லையே



சிறுவயது நட்புதான் பூரிப்புதான் ..
வளர்பருவ நட்புதான் துணிந்து நிற்கும்தான்...
முதிர்பருவ நட்புதான் அனுபவம் சொல்லும்தான்...
கல்வி,விளையாட்டு,பயணம்...
என்று எங்கே சென்றாலும் நட்புமலர் 
மலர்ந்திடும்... மணம்கமழ்ந்திடும்...
நட்புக்கு எல்லை இல்லையே 
சிறகை விரித்து பறக்குமே....
அறிவுடையார் நட்பு வளர்பிறைதானே 
பேதைகளின் நட்பு தேய்பிறைதானே 
நற்பண்புடையார் நட்பு இன்பம்
தரும்தானே...
நட்பு என்பது சிரித்து மகிழமட்டுமல்ல
தவறைகடிந்துதிருத்துவதுமாகுமே...
ஆடைஇழந்தவனுக்கு மானம் காக்க 
கை உதவுவது போல...
நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதே  நல்லநட்பு ஆகுமே ...
திருக்குறள் நமக்கு நட்பின் சிறப்பை 
எடுத்துக்கூறுதே....
முகம்பாராமல் உள்ளத்தால் ஒன்றுபட்ட...
கோப்பெருஞ்சோழன்பிசிராந்தையார்
நட்புதான்....
நட்புக்குஇலக்கணம்ஆகுமே...!!!
உள்ளன்பு ஒன்றே சிறந்தநட்பாகுமே..!  
இனிமையாக பழகிடுவோம்...!!!
உண்மையாக இருந்திடுவோம்...!!!
நட்புக்கோர்இலக்கணமாய்...!!!
நான் என்ற அகந்தையை தூக்கி எறிந்திடுவோம்..!!!
நட்பு மலர் வாசம்... 
உலகம் முழுவதும்வீச ...
கோடி இன்பம் கண்டிடுவோம்...!!!
இன்பம் பொங்க வாழ்ந்திடுவோம்..!!

(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்