டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கூடத்தான் பாகிஸ்தானுக்கு விளையாட வர மறுத்து வருகிறது. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்று பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், முன்னாள் ஐசிசி தலைவருமான எஹ்சான் மணி தெரிவித்துள்ளார்.
ஆனால் மணி சொல்வது போல இந்தியா முழுமையாக பாகிஸ்தானைப் புறக்கணிக்கவில்லை என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது ஐசிசி கடுமையான நடவடிக்கைளை எடுக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதி தனக்குத் தானே ஆப்பு வைத்து வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. வங்கதேச கிரிக்கெட் வீரர் ஒருவர், ஐபிஎல்லிலிருந்து நீக்கப்பட்டதால், வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்து டி20 போட்டிகளில் பங்கேற்க மறுத்தது. இதையடுத்து அந்த அணி போட்டித் தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டது.

இந்த நிலையில் வங்கதேசத்திற்கு ஆதரவாக, இந்தியாவுடனான போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. அதாவது பாகிஸ்தான் அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாகிஸ்தான் கூறுகிறது. இப்படிக் கூறினால், ஐசிசியின் தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளிலிருந்து தப்பலாம் என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எண்ணம்.
இதை முன்னாள் ஐசிசி தலைவரான எஹ்சான் மணியும் எதிரொலித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
அரசாங்கத்தின் உத்தரவைப் பின்பற்றும் பட்சத்தில் பாகிஸ்தான் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க முடியாது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்தியா பாகிஸ்தானுக்கு வர மறுத்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு ஒரு நீதி, பாகிஸ்தானுக்கு ஒரு நீதி என இரட்டை நிலையை ஐசிசி கடைபிடிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் மணி கூறியுள்ளது போல இந்தியா முழுமையாக பாகிஸ்தானை புறக்கணிக்கவில்லை என்பது இங்கு முக்கியமானது. 2025 சாம்பியன்ஸ் டிராபியின் போது இந்தியா பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மறுத்தாலும், பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளில் விளையாடியது. பாகிஸ்தானுடன் அந்த இடத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்டது. ஆனால் தற்போது பாகிஸ்தான், பொதுவான இடமான இலங்கையில் இந்தியாவுடன் விளையாடவே மறுக்கிறது. இது ஐசிசி விதிமுறைகளின்படி பாகிஸ்தானுக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும்.
பொது இடத்தில் கூட விளையாட மறுப்பதை ஐசிசி விதிமுறைகள் ஏற்காது என்றும் கூறப்படுகிறது. எனவே எப்படிப் பார்த்தாலும், இந்தியாவுடன் விளையாடுவதை பாகிஸ்தான் புறக்கணித்தால் அந்த நாட்டுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றே சொல்கிறார்கள்.
எதிர்காலத்தை வழிநடத்துதலும், சவால்களும்.. செயற்கை நுண்ணறிவின் எழுச்சி கதை (7)
World Oral Health Day.. பல் போனால் சொல் போச்சா?
பயணம்
World Sparrows day: சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து .. கொண்டாடி மகிழ்வோம் வாங்க!
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை உலுக்கும் 1,000 கி.மீ நீள மழை மேகக்கூட்டம்
ரூ. 10,000 இழந்த வாடிக்கையாளர்.. ரூ. 3.28 லட்சம் கொடுங்க.. வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் சூடு!
கமேனி படுகொலை.. இந்தியா இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் - சசி தரூர் கருத்து
வயலாநல்லூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: மாணவ - மாணவிகள் பங்கேற்பு
செல்போன் ஆத்திச்சூடி
{{comments.comment}}