கொச்சி: விமானங்களில் பயணிக்கும் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் டெக்னிக்குகள் எல்லாம் ஆச்சரியப்பட வைக்கும். கற்பனையே செய்து பார்க்க முடியாத வகையில் எல்லாம் கடத்திக் கொண்டு வருவார்கள்.
வெளிநாடுகளிலிருந்து பெரும்பாலும் நகைதான் அதிகம் கடத்தப்பட்டு வரும். விலை உயர்ந்த நகைகளை கடத்தி வருவோர்தான் அதிகம். ஒரு ஆள் இவ்வளவு நகைதான் விமானத்தில் எடுத்து வர முடியும் என்று கணக்கு உள்ளது. சில கடத்தல்காரர்கள் அந்த அளவிலான நகையை பகிரங்கமாக கொண்டு வருவார்கள். அதற்கு மேல் உள்ள நகையை டிசைன் டிசைனாக கடத்திக் கொண்டு வருவார்கள்.
மலக்குழாயில் வைத்துக் கொண்டு வருவது, ஷூவுக்குள் மறைத்துக் கொண்டு வருவது என்று விதம் விதமாக கொண்டு வருவார்கள். இந்த நிலையில் கொச்சி விமான நிலையத்தில், ஒரு பெண் பயணி இன்னும் வித்தியாசமான முறையில் நகையைக் கடத்திக் கொண்டு வந்துள்ளார்.
ரோம் நகரிலிருந்து இவர் கொச்சிக்கு விமானம் மூலம் வந்துள்ளார். வழக்கமான பரிசோதனையின்போது இவரிடம் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இவர் வைத்திருந்த மேக்கப் கிட் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவை பரிசோதிக்கப்பட்டன. அப்போது அந்தப் பெண் வைத்திருந்த நிவியா கிரீம் டப்பாவைப் பரிசோதித்தனர். அந்தப் பரிசோதனையின்போது கிரீமுக்குள் ஏதோ இருப்பது போல இருந்தது. உடனே அதை எடுத்துப் பார்த்தபோது அது தங்க வளையம். 4 வளையங்கள் ஒரு டப்பாவில் இருந்தது.
இதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தங்க வளையங்கள் 640 கிராம் எடையில் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 36.07 லட்சமாகும். அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!
விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்
முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!
பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்
கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!
{{comments.comment}}