சாமோலி, உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றங்கரையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியதில் 10 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
அலக்நந்தா ஆற்றங்கரையோரம் பிபல்கோட்டி பகுதியில் நீர் மின்சாரத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் முகாம் அமைத்து பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
தீயில் கருகிய பலரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீயணைப்புப் படையினரும், மின்சாரத் துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஉள்ளதாக சாமோலி போலீஸ் எஸ்பி பர்மேந்திரா தோவல் கூறியுள்ளார். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}