சாமோலி, உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றங்கரையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியதில் 10 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
அலக்நந்தா ஆற்றங்கரையோரம் பிபல்கோட்டி பகுதியில் நீர் மின்சாரத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் முகாம் அமைத்து பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
தீயில் கருகிய பலரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீயணைப்புப் படையினரும், மின்சாரத் துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஉள்ளதாக சாமோலி போலீஸ் எஸ்பி பர்மேந்திரா தோவல் கூறியுள்ளார். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
{{comments.comment}}