அடுத்தடுத்து உதிர்ந்த பாச மலர்கள்.. 104 வயது அக்கா மரணம்.. சோகத்தில்  102 வயது தம்பியும் காலமானார்!

Nov 21, 2023,11:44 AM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே அக்கா இறந்த துக்கத்தில் தம்பியும் இறந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

என்ன சோகம் என்றால் அக்காவின் வயது 104, தம்பியின் வயது 102 ஆகும் என்பதுதான். ஊரே கூடி அவர்களுக்காக கண்ணீர் உகுத்தது.

வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் வள்ளி அம்மாள். இவருக்கு வயது 104 ஆகும். நேற்று மாலை 5 மணிக்கு வயது மூப்பு காரணமாக காலமானார் வள்ளி அம்மாள். அவருக்கு துரைசாமி என்ற தம்பி இருந்தார். அவருக்கு வயது 102 ஆகும். அக்காவும், தம்பியும் அப்படி பாசமாக இருப்பார்களாம். அக்கா மீது தம்பிக்கு உயிராம்.

அப்படிப்பட்ட அக்கா மரணத்தைத் தழுவியதைக் கேட்டு தம்பி துரைசாமி அழுதபடி இருந்தார். அவரால் அக்காவின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு, தம்பி துரைசாமி காலமானார்.. அக்காவின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தம்பியும் மரணத்தைத் தழுவியதால் அந்தக் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ஊரே சோகமானது.



இன்றைய காலகட்டத்தில் பணம் தான் பெரிது என்று நீ யாரோ நான் யாரோ என்று வாழும் உடன்பிறப்புகள் தான் அதிகமாக உள்ளனர். சொத்து தகராறில் தம்பியை கொல்லும் அளவிற்கு துணியும் அண்ணன்களும் உண்டு. அண்ணனை கொல்லும் அளவிற்கு துணியும் தம்பிகளும் உண்டு.  நமக்கு தெரிந்த செய்தி கொஞ்சம் என்றால் தெரியாமல் நடக்கும் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை எனலாம்.

இப்படிப்பட்ட காலத்தில் அக்காவும் தம்பியுமாக, பாசத்துடன் வாழ்ந்து இரு குடும்பங்களும் ஒற்றுமையாக வாழ்வதைப் பார்த்து  மகிழ்ந்த வள்ளி அம்மாளும், துரைசாமியும் மரணத்திலும் இணைந்தது அனைவரையும் உருக வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்