சென்னை: தீபாவளித் திருநாளையொட்டி நவம்பர் 9ம் தேதி 10,975 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகை ஐப்பசியில் வரும் அமாவாசை நாளில் கொண்டாடுகிறோம். அம்பாள் நரகாசுரனை வரம் செய்த நாளாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதால் அன்று லட்சுமியை வழிபடும் தினமாகவும் உள்ளது.
இப்பண்டிகை வாழ்வில் இருளைப் போக்கி, ஒளியை கொடுக்கும் பண்டிகையாக மகிழ்ச்சியை கொடுக்கிறது. அந்நாளில் வீடுகள் தோறும் தீபங்கள் ஏற்றப்பட்டு புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, ஒருவருக்கொருவர் இனிப்புகள் பரிமாறி மிகவும் சிறப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறோம்.
முன்பெல்லாம் சொந்த ஊர்களை விட்டு வெளியேறி வெளியூர்களில் வசித்து வந்தோர் குறைவாக இருந்தனர். ஆனால் இன்று காலம் மாறி விட்டது. சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களில்தான் பலரும் வசிக்கின்றனர்.. வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தோர்தான் பெரும்பாலானவர்கள்.
தீபாவளி, பொங்கல் திருநாட்களில் குடும்பத்தோடு சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகைகளை இவர்கள் கொண்டாடுவது வழக்கம். இதனால் அந்த சமயத்தில், பஸ், ரயில், விமானம் என எல்லாவற்றிலும் கூட்டம் அலை மோதும். இந்த சமயத்தில் சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கும் சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தின் முடிவில் வழக்கமான பேருந்துகளோடு (6300 பேருந்துகள்), கூடுதலாக 4675 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 10,975 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது.
நவம்பர் 9ம் தேதி முதல் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதுதவிர சொந்த ஊர்களுக்குச் சென்றோர் சென்னை திரும்புவதற்கு வசதியாக நவம்பர் 13ம் தேதியும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
சிறப்புப் பேருந்துகள் எங்கிருந்து செல்லும்
சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}