- மஞ்சுளா தேவி
சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சியின் புதிய எஸ்பியாக சமய் சிங் மீனா அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாற்றப்பட்டுள்ள 11 ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்த விவரம்:
1. சென்னை போக்குவரத்து துணை ஆணையாளராக, வி. பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. மதுரை மாவட்ட துணை ஆணையாளராக பி. பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. கோவை சிவில் சப்ளை சிஐடி பிரிவு காவல் கண்காணிப்பாளராக, எம் .சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. சென்னை கிழக்கு சட்ட ஒழுங்கு இணை ஆணையாளராக, தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல் தடுப்பு பிரிவு ஐஜி யாக, தமிழ்ச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. டான்ஜெட்கோ கண்காணிப் பிரிவு ஐஜி யாக ,பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. சென்னை சிறைத்துறை ஏடி ஜிபியாக மகேஸ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக, கல்பனா நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9. டி .என்.பி.எல் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக, சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
10. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
11. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய் சிங் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}