சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) பதவிகளுக்கான தேர்வுகள் இன்று (ஜூலை 12, 2025) காலை தமிழகம் முழுவதும் 4922 தேர்வு மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்பே மையங்களுக்கு வந்து சேர வேண்டும் என்ற கடும் நிபந்தனையுடன், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
காலை 9 மணிக்குத் தேர்வு தொடங்கிய தேர்வை கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள். ஆனால் மொத்தப் பணியிடங்கள் 3935 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனக்காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்டபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு மையங்களில் முறைகேடுகளைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பறக்கும் படைகள், தேர்வு மையங்களுக்குள் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டு செல்வதற்குத் தடை, தேர்வு அறைக்குள் தேர்வர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள தடை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களுக்கு வரும் தேர்வர்களின் நுழைவுச் சீட்டு, அடையாள அட்டை ஆகியவை தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு அனுப்பப்பட்டனர். .
தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை தேர்வு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.
பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. இபிஎஸ்.க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு!
ஒன்றிணைந்த அதிமுக.. செங்கோட்டையன் சொல்வதே சரி.. ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆதரவு
யார்? யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வெளிப்படையாக கூற வேண்டும்: திருமாவளவன்
செங்கோடையன் பேச்சு... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
Unified ADMK: செங்கோட்டையன் கருத்துக்கு பெருகும் ஆதரவு.. என்ன செய்ய போகிறார் இபிஎஸ்?
செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் மறுத்தால்.. திமுக, தவெகவுக்கு சாதகமாகும் களம்!
செங்கோட்டையன் தனது உடம்பில் ஓடுவது அதிமுக இரத்தம் தான் என்பதை நிரூபித்துவிட்டார்: சசிகலா
பிரிந்து சென்றவர்கள் என்றால்.. நயினார் நாகேந்திரன் முதல் செந்தில் பாலாஜி வரை பெரிய லிஸ்ட்டாச்சே!
வட இந்தியாவை உலுக்கி எடுக்கும் கன மழை.. துண்டிக்கப்பட்ட காஷ்மீர்.. தவிக்கும் மக்கள்
{{comments.comment}}