சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) பதவிகளுக்கான தேர்வுகள் இன்று (ஜூலை 12, 2025) காலை தமிழகம் முழுவதும் 4922 தேர்வு மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்பே மையங்களுக்கு வந்து சேர வேண்டும் என்ற கடும் நிபந்தனையுடன், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
காலை 9 மணிக்குத் தேர்வு தொடங்கிய தேர்வை கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள். ஆனால் மொத்தப் பணியிடங்கள் 3935 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனக்காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்டபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு மையங்களில் முறைகேடுகளைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பறக்கும் படைகள், தேர்வு மையங்களுக்குள் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டு செல்வதற்குத் தடை, தேர்வு அறைக்குள் தேர்வர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள தடை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களுக்கு வரும் தேர்வர்களின் நுழைவுச் சீட்டு, அடையாள அட்டை ஆகியவை தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு அனுப்பப்பட்டனர். .
தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை தேர்வு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}