வந்துருச்சுய்யா வந்துருச்சுய்யா... வெளுத்து கட்ட போகும் கனமழை.. 15 மாவட்டங்களில்!

Oct 09, 2023,04:09 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் நாளை சென்னை உட்பட 15 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. மாலை நேரங்களில் குளிர்ச்சி நிலவியது. சென்னை நகரின் ஒரு சில இடங்களில்  மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது . 

இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட 15 மாவட்டத்தில் நாளை கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



\சென்னை,  கோவை, நீலகிரி, திருப்பூர் ,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ,
கள்ளக்குறிச்சி, சேலம் ,நாமக்கல் போன்ற  மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் . திருச்சி, மதுரை, கரூர் திண்டுக்கல் மற்றும் தேனி  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்