வந்துருச்சுய்யா வந்துருச்சுய்யா... வெளுத்து கட்ட போகும் கனமழை.. 15 மாவட்டங்களில்!

Oct 09, 2023,04:09 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் நாளை சென்னை உட்பட 15 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. மாலை நேரங்களில் குளிர்ச்சி நிலவியது. சென்னை நகரின் ஒரு சில இடங்களில்  மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது . 

இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட 15 மாவட்டத்தில் நாளை கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



\சென்னை,  கோவை, நீலகிரி, திருப்பூர் ,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ,
கள்ளக்குறிச்சி, சேலம் ,நாமக்கல் போன்ற  மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் . திருச்சி, மதுரை, கரூர் திண்டுக்கல் மற்றும் தேனி  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?

news

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ

news

தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி

news

ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி

news

கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?

news

ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?

news

பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

news

இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!

news

முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்