சென்னை: தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். தவெகவின் ஓர் ஆண்டு காலம் நிறைவு விழா சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதற்கு முன்னர் தவெக கட்சியின் முதல் மாநாடு மிக பிரமாண்டமாக விக்கிரவாண்டி, வி.சலையில் நடைபெற்றது. இந்நிலையில், இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் தவெக முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தவெக பொதுக்குழுவின் 17 தீர்மானங்கள்:
1. இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
2. மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
3. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க கூடாது.
4. இரு மொழிக் கொள்கையில் உறுதி.
5. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.
6. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
7. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
8. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.
9. சட்ட ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான திமுக அரசு கண்டனம்.
10. டாஸ்மாக் ரூ.1000 கோடி முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும்.
11. சமூகநீதியை நிலை நிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.
12. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பு ஒரே தேர்வு.
13. பன்னாட்டு அரங்குக்குத் தந்தை பெரியார் பெயரை சூட்டுக.
14. கொள்கைத் தலைவர்கள் வழியில் பயணிப்போம்.
15. தலைவருக்கே முழு அதிகாரம்.
16. கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
17. கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல் வீரர்களுக்கு இரங்கல்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}