கும்பகோணம்: அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இரண்டு கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காவிரி ஆற்றங்கரையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே மேல காவிரி ஆற்றங்கரையில் இரு உடல்கள் கிடந்தன. பொதுமக்கள் ஆற்றங்கரையில் உள்ள உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் .உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் இவர்கள் இருவரும் இதே பகுதியை சேர்ந்த பாலகுரு மற்றும் சௌந்தர்ராஜ், கூலித் தொழிலாளர்கள் என்று தெரிய வந்தது. நேற்று இரவு இருவரும் சேர்ந்து மது அருந்தியதாக தெரியவந்தது. மேலும் படித்துறையில் உடல்களுக்கு அருகில் சானிடைசர் மற்றும் மது பாட்டில்களும் கிடந்தது.
இருவரும் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிந்தது. இவர்களின் இறப்பிற்கு வேறு காரணம் எதுவும் உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}