கும்பகோணம்: அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இரண்டு கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காவிரி ஆற்றங்கரையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே மேல காவிரி ஆற்றங்கரையில் இரு உடல்கள் கிடந்தன. பொதுமக்கள் ஆற்றங்கரையில் உள்ள உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் .உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் இவர்கள் இருவரும் இதே பகுதியை சேர்ந்த பாலகுரு மற்றும் சௌந்தர்ராஜ், கூலித் தொழிலாளர்கள் என்று தெரிய வந்தது. நேற்று இரவு இருவரும் சேர்ந்து மது அருந்தியதாக தெரியவந்தது. மேலும் படித்துறையில் உடல்களுக்கு அருகில் சானிடைசர் மற்றும் மது பாட்டில்களும் கிடந்தது.
இருவரும் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிந்தது. இவர்களின் இறப்பிற்கு வேறு காரணம் எதுவும் உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}