கும்பகோணம்: அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இரண்டு கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காவிரி ஆற்றங்கரையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே மேல காவிரி ஆற்றங்கரையில் இரு உடல்கள் கிடந்தன. பொதுமக்கள் ஆற்றங்கரையில் உள்ள உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் .உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் இவர்கள் இருவரும் இதே பகுதியை சேர்ந்த பாலகுரு மற்றும் சௌந்தர்ராஜ், கூலித் தொழிலாளர்கள் என்று தெரிய வந்தது. நேற்று இரவு இருவரும் சேர்ந்து மது அருந்தியதாக தெரியவந்தது. மேலும் படித்துறையில் உடல்களுக்கு அருகில் சானிடைசர் மற்றும் மது பாட்டில்களும் கிடந்தது.
இருவரும் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிந்தது. இவர்களின் இறப்பிற்கு வேறு காரணம் எதுவும் உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}