மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இருவர் பலி....ஏன்?

Sep 22, 2023,04:48 PM IST

கும்பகோணம்: அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இரண்டு கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காவிரி ஆற்றங்கரையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கும்பகோணம் அருகே மேல காவிரி ஆற்றங்கரையில் இரு உடல்கள் கிடந்தன. பொதுமக்கள் ஆற்றங்கரையில் உள்ள உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் .உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின்  உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பிறகு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் இவர்கள் இருவரும் இதே பகுதியை சேர்ந்த பாலகுரு மற்றும் சௌந்தர்ராஜ், கூலித் தொழிலாளர்கள் என்று தெரிய வந்தது. நேற்று இரவு இருவரும் சேர்ந்து மது அருந்தியதாக தெரியவந்தது. மேலும் படித்துறையில் உடல்களுக்கு அருகில் சானிடைசர் மற்றும் மது பாட்டில்களும் கிடந்தது.


இருவரும் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிந்தது. இவர்களின் இறப்பிற்கு வேறு காரணம் எதுவும் உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்