உடுமலைப்பேட்டையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. லாட்ஜுக்கு சீல் வைப்பு!

May 22, 2024,03:43 PM IST

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 2 சிறுமிகள் கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாலியல் குற்றத்திற்கு உதவிய சிவா லாட்ஜுக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கு உடலில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக கவலை அடைந்த பெற்றோர், டாக்டர்களிடம் கூட்டிச் சென்று பார்த்தபோது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சிறுமியிடம் விசாரித்ததில், 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியின் தோழியிடமும் பாலியல் வன்கொடுமை செய்தது இருந்தது அம்பலமானது.




இது குறித்து அச்சிறுமியின் உறவினர்கள் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்  பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஜெய காளீஸ்வரன், மதன்குமார், பரணி குமார், யுவபிரகாஷ், நந்தகோபால் , பவா பாரதி  மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


இந்த குற்றவாளிகளின் 6 பேரின் புகைப்படங்கள் கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது.அதன் பின்னர் இந்த குற்றத்திற்கு உதவியதாக சிவா லாட்ஜ் மேனேஜர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த விடுதி மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இன்று சிவா லாட்ஜுக்கு   சீல் வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்