உடுமலைப்பேட்டையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. லாட்ஜுக்கு சீல் வைப்பு!

May 22, 2024,03:43 PM IST

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 2 சிறுமிகள் கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாலியல் குற்றத்திற்கு உதவிய சிவா லாட்ஜுக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கு உடலில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக கவலை அடைந்த பெற்றோர், டாக்டர்களிடம் கூட்டிச் சென்று பார்த்தபோது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சிறுமியிடம் விசாரித்ததில், 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியின் தோழியிடமும் பாலியல் வன்கொடுமை செய்தது இருந்தது அம்பலமானது.




இது குறித்து அச்சிறுமியின் உறவினர்கள் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்  பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஜெய காளீஸ்வரன், மதன்குமார், பரணி குமார், யுவபிரகாஷ், நந்தகோபால் , பவா பாரதி  மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


இந்த குற்றவாளிகளின் 6 பேரின் புகைப்படங்கள் கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது.அதன் பின்னர் இந்த குற்றத்திற்கு உதவியதாக சிவா லாட்ஜ் மேனேஜர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த விடுதி மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இன்று சிவா லாட்ஜுக்கு   சீல் வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்