"அடித்து நொறுக்கிய பேய் மழை.. 50 வருடங்களில் இது 6வது முறை".. தமிழ்நாடு வெதர்மேன்

Dec 05, 2023,06:30 PM IST

சென்னை: கடந்த 50 வருடங்களில் சென்னை மாநகரம் மிக மிகப் பெரிய மழையை சந்தித்தது இது 6வது முறையாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


எப்புர்ரா என்று இன்னும் கூட பலருக்கு நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு கொட்டித் தீர்த்து விட்ட கன மழையுடன் ஆந்திராவில் கரையைக் கடந்து விட்டது மிச்சாங் புயல். இப்படி ஒரு காட்டு காட்டும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பெரும் மழைக்கு வாய்ப்புண்டு என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடித்து புரட்டிப் போட்டு அல்லோகல்லப்பட்டுத்தி விடும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.


இந்த நிலையில் இந்த பெரு மழை குறித்த ஒரு பின்னோக்குப் பார்வை பதிவைப் போட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். அந்த பதிவு:




கடந்த 50 ஆண்டுகளில் இதுவரை மொத்தமே ஆறு முறைதான் சென்னை மிகப் பெரிய மழைப் பொழிவை சந்தித்துள்ளது. 1976, 1985, 1996, 2005, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை மாநகரம் மிகப் பெரிய அளவிலான மழையை சந்தித்துள்ளது.  இந்த ஆண்டு  சென்னை நகரம் 2000 மில்லி மீட்டர் மழை அளவைத் தாண்டியுள்ளது.


நுங்கம்பாக்கம் கடந்த 48 மணி நேரத்தில் 469 மில்லி மீட்டர் மழையைப் பெற்றுள்ளது.  இதில் பெருமளவிலான மழையானது ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை இரவு வரையிலான காலகட்டத்தில் பெய்துள்ளது. மொத்த நகரமும் 24 மண நேரத்தில் 400 முதல் 500 மில்லி மீட்டர் அளவிலான மழையைப் பெற்றுள்ளது. 


ஆவடிதான் மிக  பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு மட்டும் 564 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பூந்தமல்லி 483 மில்லி மீட்டர் மழையைச் சந்தித்துள்ளது. இதனால்தான் கூவம் ஆற்றில் நீர்ப்போக்கு அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.  


தாம்பரம் 409 மில்லி மீட்டர் அளவிலான மழைப்பொழிவைப் பெற்றுள்ளது. இதில் பெருமளவிலான மழையானது அடையாறு ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதியில் கிடைத்துள்ளது. இதனால் அடையாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


3வதாக கொசஸ்தலையாரும் நிரம்பி வழிந்துள்ளது. ஒரு கட்டத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 45,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதுவும் நகருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆக மொத்தத்தில் கடந்த 50 ஆண்டுகளில் வரலாறு படைத்த மழை ஆண்டுகளில் ஒன்றாக 2023 இணைந்து விட்டது மட்டும் உண்மை என்று கூறியுள்ளார் வெதர்மேன்.

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்