டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிரடியாக ஜெயிக்க வேண்டும். அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக வேண்டும். அப்படி நமது வெற்றி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் பாஜக தலைமையகத்தில் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து மாநில பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். நேற்று இக்கூட்டம் முடிவடைந்தது. அதில் அமித் ஷா முக்கிய உரையாற்றினார். அப்போதுதான் இப்படிக் கூறினார் அவர்.
அமித்ஷாவின் பேச்சிலிருந்து:
வீடு வீடாக போங்கள். நமது கட்சியின் கொள்கைகளையும், பாஜக அரசுகள் மாநில அளவிலும், மத்திய அளவிலும் செய்து வரும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பணிகளை எடுத்துக் கூறுங்கள். மீண்டும் நரேந்திர மோடி மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர வேண்டும்.

2019ம் ஆண்டு தேர்தலில் நாம் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 10 சதவீத வாக்குகளை நாம் பெற வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். அதை நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதை உறுதிப்படுத்துங்கள். (2019 தேர்தலில் பாஜக 37 சதவீத வாக்குகளையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 45 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது).
சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி பிரதமர் மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி. அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி. அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையையும் பெற்ற ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே.
முதல் முறை வாக்களிப்போரை கவர முயற்சியுங்கள். அரசின் பல்வேறு நலப் பணிகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரையுங்கள். எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் எதிர்மறைப் பிரச்சாரம் குறித்து அவர்களுத்து தெளிவுபடுத்துங்கள்.
நாம் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். நாம் பெறப் போகும் வெற்றி எதிர்க்கட்சிகளை அதிர வைக்க வேண்டும். அப்படி வெல்ல வேண்டும் என்றார் அமித் ஷா.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}