மணிப்பூரில் தலைவிரித்தாடும் கலவரம், வன்முறை.. இதுவரை 219 பேர் உயிரிழப்பு

Feb 29, 2024,04:56 PM IST
மணிப்பூர்: மணிப்பூர் ஆளுநர் அனுசுயா  வன்முறையில் இதுவரை 219 பேர் உயிரிழந்ததாக சட்ட பேரவையில் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில்  கடந்த மே மாதம் முதல்   மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே வன்முறை மோதல் நடைபெற்று வருகிறது.மைதேயி சமூகத்தினர் தங்களுக்கும் பழங்குடினர் அந்தஸ்து கோரி வருகின்றனர். அதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்குள் மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை பல நாட்களாக நடைபெற்று வருகிறது.

இரு பிரிவினர்களிடையே ஏற்றபட்ட மோதல் பூதாகரமாக உருவெடுத்தது. இரு பிரிவினர்களும் தீவிரவாதக் குழுக்களும் ஆயுதம் ஏந்தி தாக்குதல்களில் ஈடுபட்டனர். இதனால்,  இக்குழுக்களின் மோதலில் உயிர் சேதமும், பொருட் சேதமும் அதிகரித்தது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.வன்முறை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.



இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் பட்ஜெட்  கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் அனுசுயா உய்கே உரையாற்றினார். அப்போது,மணிப்பூர் வன்முறையில் இதுவரை 219 பேர் இறந்துவிட்டனர். உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

உரிய சரிபார்ப்புக்கு பிறகு நிவாரண நிதி வழங்கப்படும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க 198  மத்திய ஆயுதக் காவல் படையினரும், 140  ராணுவத்தினரும் பணியில் உள்ளனர். 10,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 800 கோடி ரூபாய் இழப்பு எனவும் அறிவித்துள்ளார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்