டெல்லி: 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை மொத்தம் 22,217 தேர்தல் பாண்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இதில் 187 பாண்டுகளைத் தவிர மற்றவை பணமாக்கப்பட்டு விட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
தேர்தல் பாண்டுகள் எனப்படும் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரத்தை ஒப்படைக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த விவரங்களை பென்டிரைவில் போட்டு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது எஸ்.பி.ஐ. இந்த விவரங்களை வருகிற வெள்ளிக்கிழமை மாலைக்குள் தனது இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தான் கொடுத்த டேட்டா குறித்த விவரத்தை சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட்டாக தாக்கல் செய்துள்ளது எஸ்.பி.ஐ. 2 பிடிஎப் பைல்களாக பென் டிரைவில் விவரத்தை போட்டுக் கொடுத்துள்ளதாக எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான கால கட்டத்தில் மொத்தம் 22,217 தேர்தல் பாண்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அதில், 187 பாண்டுகள் மட்டுமே இன்னும் பணமாக்கப்படவில்லை. மற்றவை பணமாக்கப்பட்டு விட்டன. 187 பாண்டுகளுக்குரிய பணத்தை எடுத்து பிரதமர் தேசிய நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திர விதிமுறைப்படி , யார் வேண்டுமானாலும் இந்தப் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்கலாம். கொடுக்கப்படும் பத்திரத்தை 15 நாட்களுக்குள் பணமாக்கி விட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்தப் பணம் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டு விடும் என்பது விதியாகும்.
தற்போது இந்த பென் டிரைவில் உள்ள விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிடும்போதுதான் யார் யாரெல்லாம் பணம் கொடுத்தார்கள் என்ற விவரம் தெரிய வரும்.
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}