மகாராஷ்டிரா மருத்துவமனையில் 24 பேர் மரணம்.. பிரியங்கா காந்தி வேதனை

Oct 03, 2023,10:54 AM IST

டெல்லி:  மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகரில்  உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் இறந்துள்ள சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.


நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் குழந்தைகள் என்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.  இந்த சம்பவம் தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.




இந்த சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி கருத்து தெரிவிக்கையில், மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  இந்த இரட்டை என்ஜின் அரசு நிர்வாகத்தில் அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. பரிதாபமாக 24 பேரின் உயிர் பறி போயுள்ளது. அதில் 12 பேர் குழந்தைகள் என்பது வேதனை தருகிறது.


தவறு இழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பிரதமர் மோடி மெளனம் கலைக்க வேண்டும். இதுகுறித்துப் பேச வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்