மகாராஷ்டிரா மருத்துவமனையில் 24 பேர் மரணம்.. பிரியங்கா காந்தி வேதனை

Oct 03, 2023,10:54 AM IST

டெல்லி:  மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகரில்  உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் இறந்துள்ள சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.


நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் குழந்தைகள் என்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.  இந்த சம்பவம் தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.




இந்த சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி கருத்து தெரிவிக்கையில், மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  இந்த இரட்டை என்ஜின் அரசு நிர்வாகத்தில் அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. பரிதாபமாக 24 பேரின் உயிர் பறி போயுள்ளது. அதில் 12 பேர் குழந்தைகள் என்பது வேதனை தருகிறது.


தவறு இழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பிரதமர் மோடி மெளனம் கலைக்க வேண்டும். இதுகுறித்துப் பேச வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்