டெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் இறந்துள்ள சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.
நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் குழந்தைகள் என்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் தேசிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி கருத்து தெரிவிக்கையில், மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த இரட்டை என்ஜின் அரசு நிர்வாகத்தில் அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. பரிதாபமாக 24 பேரின் உயிர் பறி போயுள்ளது. அதில் 12 பேர் குழந்தைகள் என்பது வேதனை தருகிறது.
தவறு இழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பிரதமர் மோடி மெளனம் கலைக்க வேண்டும். இதுகுறித்துப் பேச வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
{{comments.comment}}