கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து 24 வயது இளைஞர் மரணம்.. தற்கொலை எதற்குமே தீர்வல்ல!

Jul 26, 2024,05:14 PM IST

சென்னை:   சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னையில் உள்ள கத்திபாரா மேம்பாலம் தான் ஆசியாவின் மிகப் பெரிய மேம்பாலம் ஆகும். இந்த பாலம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும்.  கத்திப்பாரா மேம்பலத்தின் மீது இன்று காலை 10 மணியளவில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். வந்தவர் திடீர் என்று வாகனத்தை நிறுத்தி விட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்து விட்டார். மேலிருந்து கீழே குதித்ததால் அவரது தலை நொறுங்கி ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.


இதனைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அவரை பரிசோதித்தில் அவர் இறந்திருந்தது தெரியவந்தது. அதன்பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பந்தமாக புனித தாமஸ் மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 




போலீசார் விசாரணையில், உயிரை மாய்த்துக் கொண்டவர், விருகம்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பதும் வயது 24 என்றும் தெரியவந்தது.மேலும், அவர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


நேற்று மும்பையில் இதே போல் அடல் சேது கடல் பாலத்தின் மீது காரில் வந்த ஒருவர் மேம்பாலத்தில் காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கி பாலத்தில் இருந்த தடுப்பு சுவரை தாண்டி குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நடந்தது. அதே போல இன்று சென்னையிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எதற்குமே முடிவல்ல.. வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட வேண்டும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்க. மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்டி விடுங்க. ஷேர் செய்யாமல் இருப்பதால்தான் பலருக்கும் மன அழுத்தம் இருக்கிறது. அதைப் போக்கி விட்டால் இதுபோன்ற எண்ணங்கள் வராது.


ஒரு வேளை உங்களுக்கு  விரக்தி அதிகரித்து, உயிரை விடும் எண்ணம் மனதில் தோன்றினால் யோசிக்காமல் யாருடனாவது பேசி விடுங்கள்.. அவர்களிடமிருந்து உங்களுக்குத் தீர்வு கிடைக்கலாம்.. அல்லது இந்த எண்ணை ( iCALL- 9152987821) தொடர்பு கொண்டு பேசி ஆலோசனை கேளுங்கள்.. வாழ்க்கை அழகானது.. அதை அழகாக வாழ்வோம்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்