சென்னை: கணவனை பிரிந்த 28 வயது ஆசிரியை 17 வயது மாணவனுடன் காதல் கொண்டு, அந்த மாணவனை தனியாக அழைத்துக் கொண்டு போய், வீடு எடுத்துத் தங்கி குடும்பம் நடத்தி வந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரையும் கண்டுபிடித்து மீட்ட போலீஸார், தற்போது ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை தாழம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்த மாணவர். 17 வயதாகிறது. இந்த மாணவனுக்கும் அவனுக்கு பாடம் சொல்லித் தந்தை ஹெப்சிபா என்ற ஆசிரியைக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆசிரியை ஹெப்சிபா. 28 வயதான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து வந்து சென்னையில் வசிக்கிறார். இந்தப் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆசிரியைக்கும் அந்த மாணவனுக்கும் பழக்கம் இருப்பது பள்ளிக்கு தெரிய வந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியையை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால் ஹெப்சிபா அதைக் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து மாணவனுடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து ஆசிரியையை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
அப்படியும் ஆசிரியை விடவில்லை. மாணவனை அழைத்து நாம் எங்காவது போய் விடுவோம் என்று கூறி அவனது மனதை மாற்றியுள்ளார். பின்னர் இருவரும் கோவைக்கு கிளம்பிப் போயுள்ளனர். காரமடை பகுதியில் ஒரு வீடு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மகனைக் காணாமல் தவித்த பெற்றோர் சேலையூர் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணை நடத்தியதில் இருவரும் காரமடையில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் இருவரையும் மீட்டனர். டீச்சரை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியை இப்படி செய்யலாமா? வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது என்று பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}