சென்னை: தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.
நாடு முழுவதும் சுமார் 800 சுங்கச் சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்துள்ளது. தற்போது தமிழகத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணமாக முன்னர் எல்லாம் ஓட்டுனர்களிடம் இருந்து ரொக்கமாக பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ஃபாஸ்ட் டேக் முறையில் இணைய வழியில் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. இந்த கட்டண முறை ஆண்டிற்கு 2 முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம் பல சுங்கச் சாவடிகளுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச் சாவடிக்கு எதிராக நீண்ட காலமாக மக்கள் போராடி வருகின்றனர். பல இடங்களில் காலாவதியாகி விட்ட சுங்கச் சாவடிகளாலும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இவற்றை நீக்க வேண்டும் என்று நேற்றுதான் அமைச்சர் எ.வ. வேலு கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான கட்டண வீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் நங்கிலி கொண்டான், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி மற்றும் தி.மலை மாவட்டம் காரியமங்கலம் ஆகிய மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகளுக்கான கட்டண வீதங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் நங்கிளி கொண்டான், சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்றுவர ரூபாய் 60 முதல் 400 வரை கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 95 முதல் 600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வர ரூபாய் 55 முதல் 370 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 85 முதல் 555 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
{{comments.comment}}