கோவை: சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன், மகள், ஆகிய மூவரும் கோவையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை நஞ்சுண்டாபுரம் அருகே தண்டவாளத்தில் மூன்று பேரின் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த வரலட்சுமி (45), அவரது மகன் யுவராஜ் (16 ), மகள் ஜனனி ( 15) ஆகியோர்தான் தற்கொலை செய்தவர்கள் என்று தெரியவந்தது. மூவரும் வியாழக்கிழமை போத்தனூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். அந்த வழியாக வந்த ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த இவர்கள் இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை. போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}