அம்மா, மகன், மகள்.. ரயில் முன் பாய்ந்து உயிர்நீத்த பரிதாபம்.. பின்னணி என்ன.. போலீஸ் தீவிர விசாரணை!

Apr 05, 2024,11:45 AM IST

கோவை: சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன், மகள், ஆகிய மூவரும் கோவையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை நஞ்சுண்டாபுரம் அருகே தண்டவாளத்தில் மூன்று பேரின் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  தற்கொலை செய்த மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


விசாரணையில், சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த வரலட்சுமி (45), அவரது மகன் யுவராஜ் (16 ), மகள் ஜனனி ( 15) ஆகியோர்தான் தற்கொலை செய்தவர்கள் என்று தெரியவந்தது. மூவரும்  வியாழக்கிழமை  போத்தனூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். அந்த வழியாக வந்த ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 




சென்னையைச் சேர்ந்த இவர்கள் இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை. போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்