அம்மா, மகன், மகள்.. ரயில் முன் பாய்ந்து உயிர்நீத்த பரிதாபம்.. பின்னணி என்ன.. போலீஸ் தீவிர விசாரணை!

Apr 05, 2024,11:45 AM IST

கோவை: சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன், மகள், ஆகிய மூவரும் கோவையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை நஞ்சுண்டாபுரம் அருகே தண்டவாளத்தில் மூன்று பேரின் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  தற்கொலை செய்த மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


விசாரணையில், சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த வரலட்சுமி (45), அவரது மகன் யுவராஜ் (16 ), மகள் ஜனனி ( 15) ஆகியோர்தான் தற்கொலை செய்தவர்கள் என்று தெரியவந்தது. மூவரும்  வியாழக்கிழமை  போத்தனூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். அந்த வழியாக வந்த ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 




சென்னையைச் சேர்ந்த இவர்கள் இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை. போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்