திருப்பதி மலைப் பாதையில்.. 3வது சிறுத்தை சிக்கியது!

Aug 17, 2023,12:18 PM IST
திருப்பதி: ‌ திருப்பதி மலைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கூண்டில் 3வது முறையாக சிறுத்தை சிக்கியுள்ளது.
     
ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லுரை சேர்ந்த ஆறு வயது சிறுமி லக்ஷிதா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரை சென்றார். அப்போது திடீரென அந்த குழந்தை காணவில்லை. பெற்றோர் திருப்பதி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சிறுமியைத் தேட ஆரம்பித்தனர் ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. 

மறுநாள் காலையில் சிறுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகில் சடலமாக மீட்கப்பட்டார். பாதி உடல்தான் கிடைத்தது. சிறுமி சிறுத்தை தாக்கி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  
இதன் விளைவாக திருப்பதியில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் திருப்பதியில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்பட்டது.

12 வயதிற்குட்பட்டோருக்கு காலையில் 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடைபயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. சிறுமியை தாக்கிய சிறுத்தையை பிடிப்பதற்காக ஆங்காங்கே கூண்டுகள் அமைக்கப்பட்டன. அதில் இதுவரை 2 சிறுத்தைகள் சிக்கிய நிலையில் தற்போது 3வது சிறுத்தையும் சிக்கியுள்ளது. நான்கு நாட்களில் 3 சிறுத்தைகள் சிக்கியதால் மக்களிடையே பீதியும் நிலவுகிறது.

அடுத்தடுத்து சிறுத்தைகள் சிக்குவதால் அடுத்து என்ன பண்ணலாம் என்று தேவஸ்தானம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. திருப்பதியில் மலை ஏறும் சாலையில் கம்பி வேலி அமைத்துள்ளனர். அதே  போன்ற கம்பி வேலியை நடைபயணம் செய்யும் இடத்தில் அமைத்தால் மக்கள் சற்று பயம் இல்லாமல் நிம்மதியுடன் வரலாம் என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்