டில்லி : மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக குஜராத்தில் அதற்கு அதிர்ச்சி அளித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. மேற்கு வங்காளம், குஜராத், கேரளா மாநிலங்களில் சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் பாஜகவை வீழ்த்தி ஒரு முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதே சமயம், கேரளாவில் காங்கிரஸ் கட்சி, ஆளும் இடதுசாரி கூட்டணியை ஒரு தொகுதியில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் இடைத்தேர்தல்:

குஜராத்தில் உள்ள விசாவதார் (Visavadar) சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி (AAP) வெற்றி பெற்றுள்ளது. இது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் கோபால் இத்தாலியா இந்த தொகுதியில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார்.
இருப்பினும், குஜராத்தில் உள்ள காடி (Kadi) தொகுதியை பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது. அங்கு அக்கட்சி ஈஸியாக வென்றுள்ளது.
கேரளா இடைத்தேர்தல்:
கேரளாவில் உள்ள நிலம்பூர் (Nilambur) சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஆர்யாதன் சௌக்கத் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இது கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு (LDF) ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் பாஜக தோல்வி
மேற்கு வங்காள மாநிலம் கலிகாஞ்ச் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் ஆளும் திரினமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது. இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் 50,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பஞ்சாப் இடைத் தேர்தல் - ஆம் ஆத்மி வெற்றி
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த இடைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால், தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தார். காங்கிரஸ் வேட்பாளரை விட 10,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
இந்தத் தொகுதியில் இதுவரை ஒரு முறை கூட பாஜக வென்றதில்லை. அதேசமயம், காங்கிரஸ் கட்சி 6 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}