டில்லி : மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக குஜராத்தில் அதற்கு அதிர்ச்சி அளித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. மேற்கு வங்காளம், குஜராத், கேரளா மாநிலங்களில் சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் பாஜகவை வீழ்த்தி ஒரு முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதே சமயம், கேரளாவில் காங்கிரஸ் கட்சி, ஆளும் இடதுசாரி கூட்டணியை ஒரு தொகுதியில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் இடைத்தேர்தல்:
குஜராத்தில் உள்ள விசாவதார் (Visavadar) சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி (AAP) வெற்றி பெற்றுள்ளது. இது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் கோபால் இத்தாலியா இந்த தொகுதியில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார்.
இருப்பினும், குஜராத்தில் உள்ள காடி (Kadi) தொகுதியை பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது. அங்கு அக்கட்சி ஈஸியாக வென்றுள்ளது.
கேரளா இடைத்தேர்தல்:
கேரளாவில் உள்ள நிலம்பூர் (Nilambur) சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஆர்யாதன் சௌக்கத் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இது கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு (LDF) ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் பாஜக தோல்வி
மேற்கு வங்காள மாநிலம் கலிகாஞ்ச் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் ஆளும் திரினமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது. இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் 50,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பஞ்சாப் இடைத் தேர்தல் - ஆம் ஆத்மி வெற்றி
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த இடைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால், தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தார். காங்கிரஸ் வேட்பாளரை விட 10,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
இந்தத் தொகுதியில் இதுவரை ஒரு முறை கூட பாஜக வென்றதில்லை. அதேசமயம், காங்கிரஸ் கட்சி 6 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}