பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஷோரனூர் பாலத்தின் மீது தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஷோரனூர் அருகே பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் இவர்கள்.

அப்போது அந்த வழியாக வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலை இவர்கள் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் வேலை பார்த்து வந்த நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக ரயில் மோதி உயிரிழந்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் இதில் உயிரிழந்தனர். இதில் ஒரு ஆண், ரயில் மோதிய வேகத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்டார். மற்ற 3 உடல்களையும் மீட்ட போலீஸார் தற்போது ஆற்றில் விழுந்த தொழிலாளரின் உடலையும் தேடி வருகின்றனர்.
உயிரிழந்து உடல்கள் மீட்கப்பட்டவர்கள் வள்ளி, ராணி மற்றும் லட்சுமணன் என்று தெரிய வந்துள்ளது. இன்னொருவரின் அடையாளம் பெயர் தெரியவில்லை. நான்கு பேரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எப்படி இவர்களை பணியில் ஈடுபடுத்தினர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்
பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்
என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்
மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??
மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது!
மின்னல்வெட்டு தாங்க முடியாமல்.. இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை.. மழையே..!
{{comments.comment}}