பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஷோரனூர் பாலத்தின் மீது தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஷோரனூர் அருகே பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் இவர்கள்.

அப்போது அந்த வழியாக வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலை இவர்கள் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் வேலை பார்த்து வந்த நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக ரயில் மோதி உயிரிழந்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் இதில் உயிரிழந்தனர். இதில் ஒரு ஆண், ரயில் மோதிய வேகத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்டார். மற்ற 3 உடல்களையும் மீட்ட போலீஸார் தற்போது ஆற்றில் விழுந்த தொழிலாளரின் உடலையும் தேடி வருகின்றனர்.
உயிரிழந்து உடல்கள் மீட்கப்பட்டவர்கள் வள்ளி, ராணி மற்றும் லட்சுமணன் என்று தெரிய வந்துள்ளது. இன்னொருவரின் அடையாளம் பெயர் தெரியவில்லை. நான்கு பேரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எப்படி இவர்களை பணியில் ஈடுபடுத்தினர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}