பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஷோரனூர் பாலத்தின் மீது தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஷோரனூர் அருகே பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் இவர்கள்.

அப்போது அந்த வழியாக வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலை இவர்கள் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் வேலை பார்த்து வந்த நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக ரயில் மோதி உயிரிழந்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் இதில் உயிரிழந்தனர். இதில் ஒரு ஆண், ரயில் மோதிய வேகத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்டார். மற்ற 3 உடல்களையும் மீட்ட போலீஸார் தற்போது ஆற்றில் விழுந்த தொழிலாளரின் உடலையும் தேடி வருகின்றனர்.
உயிரிழந்து உடல்கள் மீட்கப்பட்டவர்கள் வள்ளி, ராணி மற்றும் லட்சுமணன் என்று தெரிய வந்துள்ளது. இன்னொருவரின் அடையாளம் பெயர் தெரியவில்லை. நான்கு பேரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எப்படி இவர்களை பணியில் ஈடுபடுத்தினர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!
டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைக்கு பஞ்சமே இல்லை... உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை: அன்புமணி
கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?
சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
{{comments.comment}}