கேரளாவில் விபரீதம்.. ரயில் மோதி.. தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பரிதாப மரணம்!

Nov 02, 2024,05:30 PM IST

பாலக்காடு:  கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஷோரனூர் பாலத்தின் மீது தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


ஷோரனூர் அருகே பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் இவர்கள்.




அப்போது அந்த வழியாக வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலை இவர்கள் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் வேலை பார்த்து வந்த நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக ரயில் மோதி உயிரிழந்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் இதில் உயிரிழந்தனர். இதில் ஒரு ஆண், ரயில் மோதிய வேகத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்டார். மற்ற 3 உடல்களையும் மீட்ட போலீஸார் தற்போது ஆற்றில் விழுந்த தொழிலாளரின் உடலையும் தேடி வருகின்றனர்.


உயிரிழந்து உடல்கள் மீட்கப்பட்டவர்கள் வள்ளி, ராணி மற்றும் லட்சுமணன் என்று தெரிய வந்துள்ளது. இன்னொருவரின் அடையாளம் பெயர் தெரியவில்லை. நான்கு பேரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரயில் மோதி தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எப்படி இவர்களை பணியில் ஈடுபடுத்தினர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?

news

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

news

CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்

news

4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்

news

பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!

news

ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?

news

பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?

news

14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்