ஒரே ஒரு லிங்க்.. தொட்ட அடுத்த விநாடியே.. மொத்தப் பணமும் குளோஸ்.. வங்கி மோசடி!

Mar 06, 2023,10:53 AM IST
மும்பை: மும்பையில் தனியார் வங்கியைச் சேர்ந்த 40 வாடிக்கையாளர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை மோசடிக் கும்பல் நூதன முறையில் அபகரித்த செயல் அதிர வைத்துள்ளது.



இந்த வாடிக்கையாளர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் ஒரு லிங்க் வந்துள்ளது. அதில், உங்களது பான் விவரம், கேஒய்சி விவரத்தை பதிவு செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற மோசடிகள் குறித்து அறிந்த பல வாடிக்கையாளர்கள் அந்த லிங்க் பக்கமே போகவில்லை. ஆனால் 40 பேர் ஏமாந்து போய் அதை ஓபன் செய்து மாட்டிக் கொண்டனர்.

இந்த லிங்க்கை யாரெல்லாம் ஓபன் செய்தார்களோ அத்தனை பேரின் வங்கிக் கணக்கிலிருந்தும் லட்சக்கணக்கான பணம் கை மாறி விட்டது. இதை அதிர்ந்து அந்த 40 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற லிங்க்குகளை ஓபன் செய்வது கூடாது என்று போலீஸார் அடிக்கடி எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆனாலும் மக்கள் இந்த மோசடி வலையில் சிக்கிக் கொள்வது தொடர் கதையாகி வருகிறது.



உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விட்டது, உங்களது நெட்பேங் லாகின் முடக்கப்பட்டுள்ளது.. அதை ரிலீஸ் செய்ய  பின்வரும் இணைப்பை சொடுக்குங்கள் என்பது உள்பட விதம் விதமான முறையில் உங்களுக்கு லிங்க்குகளை மோசடியாளர்கள் அனுப்புவார்கள். அது எதையும் நீங்கள் ஓபன் செய்து விடக் கூடாது. மீறி செய்தால் மொத்தப் பணமும் காலிதான்.

மும்பை வங்கி மோசடியில் ஏமாந்த 40 பேரில் டிவி நடிகை ஸ்வேதா மேமனும் ஒருவராம். அவர் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். தனக்கு வந்த இணைப்புக்குள் போய் கஸ்டமர் ஐடி, பாஸ்வேர்ட், ஓடிபி என எல்லாவற்றையும் கொடுத்த இவர் இப்போது, 57 ஆயிரத்து 638 ரூபாய் பணத்தை இழந்து விட்டு நிற்கிறார்.

உஷாரா இருங்க மக்களே!

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்