ஒரே ஒரு லிங்க்.. தொட்ட அடுத்த விநாடியே.. மொத்தப் பணமும் குளோஸ்.. வங்கி மோசடி!

Mar 06, 2023,10:53 AM IST
மும்பை: மும்பையில் தனியார் வங்கியைச் சேர்ந்த 40 வாடிக்கையாளர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை மோசடிக் கும்பல் நூதன முறையில் அபகரித்த செயல் அதிர வைத்துள்ளது.



இந்த வாடிக்கையாளர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் ஒரு லிங்க் வந்துள்ளது. அதில், உங்களது பான் விவரம், கேஒய்சி விவரத்தை பதிவு செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற மோசடிகள் குறித்து அறிந்த பல வாடிக்கையாளர்கள் அந்த லிங்க் பக்கமே போகவில்லை. ஆனால் 40 பேர் ஏமாந்து போய் அதை ஓபன் செய்து மாட்டிக் கொண்டனர்.

இந்த லிங்க்கை யாரெல்லாம் ஓபன் செய்தார்களோ அத்தனை பேரின் வங்கிக் கணக்கிலிருந்தும் லட்சக்கணக்கான பணம் கை மாறி விட்டது. இதை அதிர்ந்து அந்த 40 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற லிங்க்குகளை ஓபன் செய்வது கூடாது என்று போலீஸார் அடிக்கடி எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆனாலும் மக்கள் இந்த மோசடி வலையில் சிக்கிக் கொள்வது தொடர் கதையாகி வருகிறது.



உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விட்டது, உங்களது நெட்பேங் லாகின் முடக்கப்பட்டுள்ளது.. அதை ரிலீஸ் செய்ய  பின்வரும் இணைப்பை சொடுக்குங்கள் என்பது உள்பட விதம் விதமான முறையில் உங்களுக்கு லிங்க்குகளை மோசடியாளர்கள் அனுப்புவார்கள். அது எதையும் நீங்கள் ஓபன் செய்து விடக் கூடாது. மீறி செய்தால் மொத்தப் பணமும் காலிதான்.

மும்பை வங்கி மோசடியில் ஏமாந்த 40 பேரில் டிவி நடிகை ஸ்வேதா மேமனும் ஒருவராம். அவர் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். தனக்கு வந்த இணைப்புக்குள் போய் கஸ்டமர் ஐடி, பாஸ்வேர்ட், ஓடிபி என எல்லாவற்றையும் கொடுத்த இவர் இப்போது, 57 ஆயிரத்து 638 ரூபாய் பணத்தை இழந்து விட்டு நிற்கிறார்.

உஷாரா இருங்க மக்களே!

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்