சென்னை: பராமரிப்பு என்ற பெயரில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் ரயில்கள் சமீப காலமாக அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது.
சென்னை மக்களின் மிக முக்கியப் போக்குவரத்துகளில் ஒன்று புறநகர் ரயில்கள். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மார்க்கங்களில் இவை இயக்கப்படுகின்றன. அதேபோல சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான மார்க்கத்தில் அடிக்கடி பராமரிப்பு என்ற பெயரில் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சென்னை நகருக்குள் எளிதாக சென்று வருவதற்கு மின்சார ரயில்கள்தான் சுலபமானவை, எளிமையானவை. குறிப்பாக ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கடற்கரைக்குச் செல்வோரும், தி நகர் போன்ற பகுதிகளுக்குச் செல்வோரும் புறநகர் ரயில்களைத்தான் அதிகம் நாடுவார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் விடுமுறைக்காலத்தில் இதுபோல பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் ரயில்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவது பயணிகளுக்கு பெரும் சிரமத்தைத் தருவதாக உள்ளது. குறிப்பாக இன்று மக்கள் மிகப் பெரும் அவஸ்தையைச் சந்தித்து விட்டனர்.
இன்று தை மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் எங்கு பார்த்தாலும் கல்யாண வீடுகளுக்குச் செல்லும் கூட்டமாக இருந்தது. பஸ்களில் இடமில்லை. சாலைகளிலும் அதிக அளவிலான போக்குவரத்து.. இந்த நிலையில் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டதால் மக்கள் பட்ட அவதியைச் சொல்ல வார்த்தையில்லை.
இன்று கடற்கரை - கோடம்பாக்கம் இடையே பராமரிப்பு பணி நடைபெற்றதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3. 30 மணி வரை தாம்பரம் முதல் கடற்கரை வரை கிட்டத்தட்ட 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பயணிகள் நலனுக்காக செங்கல்பட்டு - தாம்பரம் இடையே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் ரத்து காரணமாக தாம்பரம் பஸ் நிலையத்தில் கூட்டம் அலை மோதியது. மாநகரப் போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்கியது. பலர் மெட்ரோ ரயில்களை நாடியதால் அங்கும் கூட்டம் அலை மோதியது.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}