சென்னை: சென்னை பீச் டூ தாம்பரம் இடையே பராமரிப்பு பணி காரணமாக 44 புறநகர் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை, அதாவது நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையில் ரயில் போக்குவரத்து பெரும் பங்கு வகிக்கின்றது. இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை, ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில்களும் கூடுதலாக இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கம் டூ தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை டூ தாம்பரம் இடையே 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் தாம்பரம் டூ செங்கல்பட்டு இடையே குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சமயத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகளும், மெட்ரோ ரயில்களும் இயக்கப்படும் என்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}