சென்னை: சென்னை பீச் டூ தாம்பரம் இடையே பராமரிப்பு பணி காரணமாக 44 புறநகர் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை, அதாவது நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையில் ரயில் போக்குவரத்து பெரும் பங்கு வகிக்கின்றது. இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை, ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில்களும் கூடுதலாக இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கம் டூ தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை டூ தாம்பரம் இடையே 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் தாம்பரம் டூ செங்கல்பட்டு இடையே குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சமயத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகளும், மெட்ரோ ரயில்களும் இயக்கப்படும் என்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}