சென்னை: சென்னை பீச் டூ தாம்பரம் இடையே பராமரிப்பு பணி காரணமாக 44 புறநகர் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை, அதாவது நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையில் ரயில் போக்குவரத்து பெரும் பங்கு வகிக்கின்றது. இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை, ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில்களும் கூடுதலாக இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கம் டூ தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை டூ தாம்பரம் இடையே 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் தாம்பரம் டூ செங்கல்பட்டு இடையே குறிப்பிட்ட நேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சமயத்தில் கூடுதலாக அரசுப் பேருந்துகளும், மெட்ரோ ரயில்களும் இயக்கப்படும் என்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}