எழும்பூர் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்புப் பணிகள்.. 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றம்!

Jun 20, 2025,10:52 AM IST

சென்னை:  சென்னை எழும்பூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக 5 எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கம் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 


தாம்பரத்திலிருந்து இந்த ரயில்கள் இயக்கப்படும், வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:


சென்னை எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர்-மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர்-மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ்




இந்த ஐந்து ரயில்களும் ஜூன் 18ம் தேதி முதல் தாம்பரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 18ம் தேதி வரை தாம்பரத்திலிருந்தே இந்த ரயில்கள் இயக்கப்படும்.


அதேபோல தாம்பரம்- ஹைதராபாத் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். இன்று முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை இந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இந்த எக்ஸ்பிரஸ் ரயில்களின் மாற்றம் காரணமாக, பயணிகளின் வசதிக்காக மின்சார ரயில்களின் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, கும்மிடிப்பூண்டி - செங்கல்பட்டு, அரக்கோணம் - சென்னை கடற்கரை உள்ளிட்ட 7 மின்சார ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


அதேபோல மேற்கண்ட காலகட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே சிறப்பு பயணிகள் ரயில்களும் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்