லடாக்கில் திடீர் வெள்ளப்பெருக்கு.. டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற 5 ராணுவ வீரர்கள் பலி

Jun 29, 2024,05:52 PM IST

லடாக்:   லடாக்கில் ராணுவ டேங்கரில் 5 ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்க முயன்று பயிற்சியில் ஈடுபட்ட போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 5 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.


வட மாநிலங்களில் சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், லடாக்கில்  கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அங்குள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லடாக் நியோமா- சுஷூல்  பகுதியில் வெள்ளத்தின் போது ஆற்றைக் கடப்பதற்கான பயிற்சிகள் ராணுவ வீரர்களுக்கு நடத்தப்படுவது வழக்கம். அதே போல வழக்கமான பயிற்சி நடைபெற்று வந்தது. 




இதற்காக டி 72 வகை ராணுவ பீரங்கியில் நேற்று மாலை 5 ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் நீர் அதிகரித்தது. அப்போது பீரங்கியுடன் ஐந்து பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனடியாக ராணுவ அதிகாரிகளின் உதவியோடு, ராணுவ வீரர்கள் மீட்பு படையினர் உதவியுடன் தேடலில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை 5 ராணுவ வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லடாக்கில் ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியின் ஏற்பட்ட துரதிஷ்டவசமான விபத்தில் நமது வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. இந்த துயர சம்பவத்தில் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்