சென்னை : தமிழகத்தில் செயல்படும் 5329 டாஸ்மாக் கடைகளில் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை கொள்கை விளக்கு குறிப்பு பற்றி பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் ரூ.8,047.91 கோடி அதிகரித்துள்ளது. 2021-22 ல் ரூ.36,050.65 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் 2022-23 ம் ஆண்டில் முதல் மூன்று மாதங்களிலேயே ரூ.44,098.56 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.
மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 5329 டாஸ்மாக் கடைகளில் தகுதியான 500 சில்லறை மது விற்பனை கைடகள் கண்டறியப்பட்டு மூடப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படும் போன்ற அறிவிப்புக்களை வெளியிட்டார்.
இதை பார்த்த நெட்டிசன்கள், இது வெறும் அறிவிப்பு மட்டும் தானா? இல்ல நிஜமாவே மூடப் போறீங்களா அமைச்சரே என கிண்டலாக கேள்வி கேட்டுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு வருமானம் அதிகரித்து வருகிறது என்பதை அவரே புள்ளி விபரத்துடன் சொல்லி விட்டார். பிறகு எப்படி மூடுவார்கள். மக்களும், எதிர்க்கட்சிகளும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு ட்விட்டரில் பெரும் விவாத பொருளாகி உள்ளது.
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
{{comments.comment}}