சென்னை : தமிழகத்தில் செயல்படும் 5329 டாஸ்மாக் கடைகளில் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை கொள்கை விளக்கு குறிப்பு பற்றி பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் ரூ.8,047.91 கோடி அதிகரித்துள்ளது. 2021-22 ல் ரூ.36,050.65 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் 2022-23 ம் ஆண்டில் முதல் மூன்று மாதங்களிலேயே ரூ.44,098.56 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.
மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 5329 டாஸ்மாக் கடைகளில் தகுதியான 500 சில்லறை மது விற்பனை கைடகள் கண்டறியப்பட்டு மூடப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படும் போன்ற அறிவிப்புக்களை வெளியிட்டார்.
இதை பார்த்த நெட்டிசன்கள், இது வெறும் அறிவிப்பு மட்டும் தானா? இல்ல நிஜமாவே மூடப் போறீங்களா அமைச்சரே என கிண்டலாக கேள்வி கேட்டுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு வருமானம் அதிகரித்து வருகிறது என்பதை அவரே புள்ளி விபரத்துடன் சொல்லி விட்டார். பிறகு எப்படி மூடுவார்கள். மக்களும், எதிர்க்கட்சிகளும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு ட்விட்டரில் பெரும் விவாத பொருளாகி உள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}