சென்னை : தமிழகத்தில் செயல்படும் 5329 டாஸ்மாக் கடைகளில் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை கொள்கை விளக்கு குறிப்பு பற்றி பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் ரூ.8,047.91 கோடி அதிகரித்துள்ளது. 2021-22 ல் ரூ.36,050.65 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் 2022-23 ம் ஆண்டில் முதல் மூன்று மாதங்களிலேயே ரூ.44,098.56 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.
மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 5329 டாஸ்மாக் கடைகளில் தகுதியான 500 சில்லறை மது விற்பனை கைடகள் கண்டறியப்பட்டு மூடப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படும் போன்ற அறிவிப்புக்களை வெளியிட்டார்.
இதை பார்த்த நெட்டிசன்கள், இது வெறும் அறிவிப்பு மட்டும் தானா? இல்ல நிஜமாவே மூடப் போறீங்களா அமைச்சரே என கிண்டலாக கேள்வி கேட்டுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு வருமானம் அதிகரித்து வருகிறது என்பதை அவரே புள்ளி விபரத்துடன் சொல்லி விட்டார். பிறகு எப்படி மூடுவார்கள். மக்களும், எதிர்க்கட்சிகளும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு ட்விட்டரில் பெரும் விவாத பொருளாகி உள்ளது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}