சென்னை : தமிழகத்தில் செயல்படும் 5329 டாஸ்மாக் கடைகளில் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை கொள்கை விளக்கு குறிப்பு பற்றி பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் ரூ.8,047.91 கோடி அதிகரித்துள்ளது. 2021-22 ல் ரூ.36,050.65 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் 2022-23 ம் ஆண்டில் முதல் மூன்று மாதங்களிலேயே ரூ.44,098.56 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.
மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 5329 டாஸ்மாக் கடைகளில் தகுதியான 500 சில்லறை மது விற்பனை கைடகள் கண்டறியப்பட்டு மூடப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படும் போன்ற அறிவிப்புக்களை வெளியிட்டார்.
இதை பார்த்த நெட்டிசன்கள், இது வெறும் அறிவிப்பு மட்டும் தானா? இல்ல நிஜமாவே மூடப் போறீங்களா அமைச்சரே என கிண்டலாக கேள்வி கேட்டுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு வருமானம் அதிகரித்து வருகிறது என்பதை அவரே புள்ளி விபரத்துடன் சொல்லி விட்டார். பிறகு எப்படி மூடுவார்கள். மக்களும், எதிர்க்கட்சிகளும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு ட்விட்டரில் பெரும் விவாத பொருளாகி உள்ளது.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}