சென்னை: ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை–தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் தற்போது அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பகல் நேரங்களில் ரயில் இயங்கும் என்றும் இரவு நேரத்தில் மட்டும் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட ரயில் நேர விவரம்
முன்னதாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி, தாம்பரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ஆகிய மார்க்கங்களில் ரத்து செய்யப்படும் 55 ரயில்கள் குறித்த முழு விவரத்தையும், நேர வரிசைப்படி தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

பகல் நேர ரயில் சேவை ரத்து இல்லை:
தற்போது அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஜூலை 23 முதல் 26 வரையிலும், ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரையிலும் வழக்கம் போல பகல் நேர ரயில்கள் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல ஜூலை 27, 28 மற்றும் அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல ரயில் சேவை ரத்து அமல்படுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதற்காக பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநில போக்குவரத்துத் துறைக்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது. பயணிகளுக்கு உதவுவதற்காக சென்னை எழும்பூர், பல்லவாரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் உதவி மையம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் செங்கல்பட்டிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் இயக்கப்படவுள்ளது.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}