சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றுள்ள நிலையில் கட்சியை கவனித்துக் கொள்ள எச்.ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று மாத கால அரசியல் படிப்புகளை மேற்கொள்ள கடந்த புதன்கிழமை லண்டன் சென்றார். படிப்பை முடித்துவிட்டு மீண்டும் நவம்பர் மாத இறுதியில் தமிழகம் திரும்புகிறார்.
இந்த இடைப்பட்ட மூன்று மாத காலத்தில் அண்ணாமலைக்கு பதிலாக தற்காலிக தலைவர் நியமனம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நான் லண்டனுக்கு சென்றாலும் அங்கிருந்து கட்சிப் பணிகளைக் கவனித்துக் கொள்வேன். ஆளுங்கட்சியினரின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருப்பேன் என அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கட்சி பணிகளை கவனித்துக் கொள்ள பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி,
கனகசபாபதி, பொருளாளர் சேகர், மாநில செயலாளர்கள் எம். முருகானந்தம், ராம சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில். எச். ராஜா மட்டுமே மூத்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}