சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றுள்ள நிலையில் கட்சியை கவனித்துக் கொள்ள எச்.ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று மாத கால அரசியல் படிப்புகளை மேற்கொள்ள கடந்த புதன்கிழமை லண்டன் சென்றார். படிப்பை முடித்துவிட்டு மீண்டும் நவம்பர் மாத இறுதியில் தமிழகம் திரும்புகிறார்.

இந்த இடைப்பட்ட மூன்று மாத காலத்தில் அண்ணாமலைக்கு பதிலாக தற்காலிக தலைவர் நியமனம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நான் லண்டனுக்கு சென்றாலும் அங்கிருந்து கட்சிப் பணிகளைக் கவனித்துக் கொள்வேன். ஆளுங்கட்சியினரின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருப்பேன் என அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கட்சி பணிகளை கவனித்துக் கொள்ள பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி,
கனகசபாபதி, பொருளாளர் சேகர், மாநில செயலாளர்கள் எம். முருகானந்தம், ராம சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில். எச். ராஜா மட்டுமே மூத்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}