சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றுள்ள நிலையில் கட்சியை கவனித்துக் கொள்ள எச்.ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று மாத கால அரசியல் படிப்புகளை மேற்கொள்ள கடந்த புதன்கிழமை லண்டன் சென்றார். படிப்பை முடித்துவிட்டு மீண்டும் நவம்பர் மாத இறுதியில் தமிழகம் திரும்புகிறார்.

இந்த இடைப்பட்ட மூன்று மாத காலத்தில் அண்ணாமலைக்கு பதிலாக தற்காலிக தலைவர் நியமனம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நான் லண்டனுக்கு சென்றாலும் அங்கிருந்து கட்சிப் பணிகளைக் கவனித்துக் கொள்வேன். ஆளுங்கட்சியினரின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருப்பேன் என அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கட்சி பணிகளை கவனித்துக் கொள்ள பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி,
கனகசபாபதி, பொருளாளர் சேகர், மாநில செயலாளர்கள் எம். முருகானந்தம், ராம சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில். எச். ராஜா மட்டுமே மூத்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}