சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றுள்ள நிலையில் கட்சியை கவனித்துக் கொள்ள எச்.ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று மாத கால அரசியல் படிப்புகளை மேற்கொள்ள கடந்த புதன்கிழமை லண்டன் சென்றார். படிப்பை முடித்துவிட்டு மீண்டும் நவம்பர் மாத இறுதியில் தமிழகம் திரும்புகிறார்.

இந்த இடைப்பட்ட மூன்று மாத காலத்தில் அண்ணாமலைக்கு பதிலாக தற்காலிக தலைவர் நியமனம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நான் லண்டனுக்கு சென்றாலும் அங்கிருந்து கட்சிப் பணிகளைக் கவனித்துக் கொள்வேன். ஆளுங்கட்சியினரின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருப்பேன் என அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் கட்சி பணிகளை கவனித்துக் கொள்ள பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி,
கனகசபாபதி, பொருளாளர் சேகர், மாநில செயலாளர்கள் எம். முருகானந்தம், ராம சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில். எச். ராஜா மட்டுமே மூத்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குழந்தை
புதுவருட டைரி!
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
{{comments.comment}}