பெங்களூரு: பெங்களூருவில் 63 அடி உயரம் கொண்ட ராம ஆஞ்சநேயர் சிலை திறக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் ராமருடன் ஆஞ்சநேயர் சேர்ந்து இருக்கும் மிக உயரமான சிலை இது தான்.
பெங்களூருவின் ராஜாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம மந்திராவில் (ராமர் கோவில்) தான் இந்த பிரம்மாண்ட ராம ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராம மந்திரா ஆலயம் தக்ஷிண அயோத்தியா என அழைக்கப்படுகிறது. இது ஸ்ரீ ராம சேவா மண்டலி கமிட்டியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பிரம்மாண்டம் என்பதை தாண்டி, இன்றைய இளைஞர்களிடம் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆகஸ்ட் 23 ம் தேதியன்று மாலை 05.30 மணியளவில் பிரண பிரதிஷ்டை செய்து இச்சிலை திறக்கப்பட்டது. இதன் மூலம் தங்களின் நீண்ட கால கனவு நிறைவேறி உள்ளதாக இக்கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட சிலை திறப்பு விழாவில் கன்னட நடிகர்கள் ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிலை குறித்து ஸ்ரீ ராம சேவா மண்டலி அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் கூறுகையில், சுமார் ரூ.2 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 370 க்கும் அதிகமான மெட்ரிக் டன் ரெடி மிக்ஸ் கான்க்ரீட், 23.50 மெட்ரிக் டன் இரும்பு, 1246 மூட்டை சிமெண்ட், 13 லோடு மணல், 13 லோடு ஜல்லி, 7816 கிலோ கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தர்மஸ்தாலாவை சேர்ந்த டாக்டர் வீரேந்திர ஹெக்டே இந்த சிலையை நிறுவ முடிவு செய்ததுடன் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை நன்கொடையாக அளித்தார். இது தவிர 40க்கும் அதிகமான குடும்பத்தினர்கள் தலா ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்து தான் இந்த சிலை அமைக்கப்பட்டது.
சுமார் 40 ஸ்தபதிகள் சேர்ந்து ஓராண்டிற்கும் மேலாக பணியாற்றி தான் இந்த சிலையை உருவாக்கினார்கள். கான்க்ரீட்டை விட ஆயுள் குறைவு என்பதால் இந்த சிலையை உருவாக்க செங்கல் பயன்படுத்தவே இல்லை என்றார். இந்த சிலையை அமைத்த ஜீவன் கலா சன்னிதி அமைப்பை சேர்ந்த ஜீவன் கூறுகையில், இதற்கு முன் கேஜிஎஃப் 2 படத்திற்காக கன்னட நடிகர் யாஷின் சிலை, பல்லாரியின் புனித் ராஜ்குமாரின் சிலை போன்ற உயரமான சிலைகளை நான் செய்துள்ளேன் என்றார். கர்நாடகாவிலேயே மிக உயரமான சிலை, புனித் ராஜ்குமார் சிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}