Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை

Jun 14, 2025,06:21 PM IST
துபாய்: துபாய் மெரினா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை துபாய் சிவில் பாதுகாப்பு குழுவினர் 6 மணி நேரம் போராடி  அணைத்தனர். வெள்ளிக்கிழமை இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றி விட்டனர். தீயணைப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அனைத்தும் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளன. கட்டிடத்தில் இருந்த 3,820 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

துபாய் மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். அவசர உதவி குழுக்கள், குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தற்காலிகமாக தங்குமிடம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.



குடியிருப்புகளில் தங்கியிருந்தவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. அவசர குழுவினர் விரைவாகவும், கவனமாகவும் செயல்பட்டு உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாத்தனர்.

அருகிலுள்ள கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில், "சுமார் 1:30 மணிக்கு தீ கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. கடந்த இரண்டு மணி நேரமாக தீ எரிந்து கொண்டிருந்தது. நிறைய பொருட்கள் கீழே விழுந்தன. சிவில் பாதுகாப்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.

அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது இந்தத் தீ விபத்து.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

WTC 2025 Finals: உலக டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து அபாரம்!

news

Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை

news

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்

news

சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?

news

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்

news

ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு

news

ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !

news

இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்

news

பற்றி எரியும் மத்திய கிழக்கு.. அனல் பறக்கும் சண்டையில் இஸ்ரேல் - ஈரான்.. மக்கள் பரிதவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்