வைட்டமின் "ஏ" கிடைக்க சாப்பிட வேண்டிய 7 சத்தான உணவுகள்

Mar 26, 2023,05:06 PM IST
சென்னை : வைட்டமின் ஏ சத்தின் அளவு சரியான விகிதத்தில் இருந்தால் மட்டுமே நமது கண்பார்வை சரியாக இருக்கும். வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் விழித்திரையில் பல விதமான பாதிப்புக்கள் ஏற்படும். இளம் வயதிலேயே பார்வை குறைபாடு வருவதற்கு வைட்டமின் ஏ பற்றாக்குறையே முக்கிய காரணமாகும்.

உடலில் ஏற்படும் வைட்டமின் ஏ குறைபாட்டை சரி செய்வதற்கு கட்டாயம் சாப்பிட வேண்டிய 7 ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல் இதோ...

1. சர்க்கரைவல்லி கிழங்கு :

ஒரு கப் அளவிற்கு தினமும் வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கினை சாப்பிட்டால் 216 சதவீதம் அளவிற்கான வைட்டமின் ஏ கிடைக்கும்.

2. சிவப்பு மிளகாய் :

தினமும் சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால் ரெட்டினா எனப்படும் விழித்திரை படலத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் வராது.



3. முலாம்பழம் :

தினமும் ஒரு கப் முலாம்பழம் சாப்பிடுவதால் 270 மில்லி கிராம் அளவிலான வைட்டமின் ஏ சத்து கிடைக்கிறது. உணவில் 30 சதவீதம் அளுவிற்கானது தினமும் முலாம்பழத்தை சேர்த்துக் கொள்வது நல்லது என டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

4. கல்லீரல் :

ஆட்டின் கல்லீரல் சாப்பிடுவதால் வைட்டமின் ஏ மட்டுமின்றி வைட்டமின் பி 12 அளவும் உடலில் அதிகரிக்கும் என டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். தினமும் 100 கிராம் அளவிற்காவது கல்லீரல் சாப்பிட்டால் ரெட்டினாலுக்கு தேவையான 7730 மைக்ரோ கிராம் சத்துக்கள் கிடைத்து விடும் என்கிறார்கள்.

5. வெண்ணெய் :

14 கிராம் வெண்ணெயில் 96 மைக்ரோ கிராம் அளவிற்கு வைட்டமின் ஏ உள்ளது. அதனால் தான் தினமும் உணவில் வெண்ணெய், நெய் போன்ற பால் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

6. காலே :

சமைத்த 118 கிராம் காலேயில் 172 மைக்ரோ கிராம் ரெட்டினால் உள்ளது. இது வைட்டமின் ஏ குறைபாட்டை சமன் செய்கிறது.

7. மாம்பழம் :

பழங்களின் ராஜா என அழைக்கப்படும் மாம்பழம் உடலுக்கு மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது. குறிப்பாக பார்வை குறைபாடு உள்ளவர்கள் மாம்பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 165 கிராம் அளவிற்கான மாம்பழத்தில் 83 மைக்ரோ கிராம் அளவிலான வைட்டமின் ஏ உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்