- மஞ்சுளா தேவி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து ,கிழக்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும், அது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ,தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு விட்டு விட்டு கன மழை கொட்டித் தீர்த்தது.
இன்று மழை நிலவரம்:
கடலூர் , நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம்.
சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதலிலேயே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்றும் காலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}