2 நாட்களில் மணிப்பூரில் ஊடுறுவிய 718 மியான்மர் நாட்டினர்.. ஏன்?

Jul 25, 2023,11:08 AM IST

இம்பால்: மணிப்பூரில் கலவரம், பதற்றம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் 700 க்கும் அதிகமான மியான்மர் நாட்டினர், மணிப்பூருக்குள் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. 


இந்த அளவுக்கு அதிக அளவிலான மியான்மர் நாட்டினர்,  எப்படி மணிப்பூருக்கு வந்தார்கள், எதற்காக வந்தார்கள் என தெரியவில்லை.




மணிப்பூரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையில் வன்முறை கும்பல் ஒன்று இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளப்பிய நிலையில் பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக இதுவரை 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 7வது குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


மணிப்பூரில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால் அங்கு 60,000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மியான்மர் நாட்டை சேர்ந்த 301 குழந்தைகள், 208 பெண்கள் உள்ளிட்ட 700 க்கும் அதிகமானவர்கள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மணிப்பூருக்குள் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. சட்ட விரோதமாக மணிப்பூருக்குள் நுழைந்த இவர்கள் 7 மாவட்டங்களில் மியான்மர் எல்லையை ஒட்டிய கிராமங்களிலும் தங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. 


மியான்மர் நாட்டினரை அழைத்துச் செல்லும் படி அசாம் பாதுகாப்பு படையை மணிப்பூர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாமல் இத்தனை பேர் எப்படி இந்திய எல்லையை தாண்டி உள்ளே வந்தனர் என விசாரைண நடத்தப்பட்டு வருகிறது. மியான்மர் நாட்டினர் மணிப்பூருக்குள் வந்ததை மணிப்பூர் தலைமை செயலாளர் வினீத் ஜோஷியும் உறுதி செய்துள்ளார். 


இது போன்று பதற்றமான சூழலில் மியான்மர் நாட்டினர் மணிப்பூருக்குள் நுழைவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அசாம் பாதுகாப்பு படையினரை மணிப்பூர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்