Vote at home: 85+ வாக்காளர்கள்.. அலைய வேண்டாம்.. வீட்டிலிருந்தே வாக்களிக்க புதிய வசதி!

Mar 16, 2024,08:49 PM IST

டெல்லி: 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், 40 சதவீதத்திற்கும் அதிகமான உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ் நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக   நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் எனவும்  தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் இன்று அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும்.17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பதவிக்காலம் வருகின்ற ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகின்றது. இதற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 




தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 20ல் தொடங்கி, மார்ச் 27ல் முடிவடையும். இந்த மனுக்கள் மார்ச் 28ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்  மார்ச் 30 ஆகும்.


இந்தத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பல்வேறு வசதிகள். அதன்படி, 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், 40 சதவீதத்திற்கும் அதிகமான உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், தாங்கள் விரும்பினால், வீட்டிலிருந்து வாக்களிக்கலாம். இவர்களுக்காக வாக்குச் சீட்டுகள் வீட்டுக்கே கொண்டு வந்து இவர்களிடமிருந்து வாக்குகள் பெறப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


இந்தத் தேர்தலில் 100 வயதைக் கடந்த 2.18 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்