டெல்லி: 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், 40 சதவீதத்திற்கும் அதிகமான உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ் நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் இன்று அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும்.17வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பதவிக்காலம் வருகின்ற ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகின்றது. இதற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 20ல் தொடங்கி, மார்ச் 27ல் முடிவடையும். இந்த மனுக்கள் மார்ச் 28ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30 ஆகும்.
இந்தத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பல்வேறு வசதிகள். அதன்படி, 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், 40 சதவீதத்திற்கும் அதிகமான உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், தாங்கள் விரும்பினால், வீட்டிலிருந்து வாக்களிக்கலாம். இவர்களுக்காக வாக்குச் சீட்டுகள் வீட்டுக்கே கொண்டு வந்து இவர்களிடமிருந்து வாக்குகள் பெறப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் 100 வயதைக் கடந்த 2.18 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}