ஓடி வரும் காவிரி.. கர்நாடக ஆறுகளில் 85,000 கன அடி நீர் திறப்பு.. தமிழ்நாடு விவசாயிகள் மகிழ்ச்சி!

Jul 21, 2024,05:10 PM IST

பெங்களூரு:  கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்கு காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக கே.ஆர்.எஸ். அணை நிரம்பப் போகிறது. இதனால் கர்நாடக காவிரி ஆறுகளில் விநாடிக்கு 85,000 கன அடி நீர் திறக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது.


கேரளா மற்றும் கர்நாடகாவில், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முதலில் கபிணி அணை நிரம்பியது. பிறகு நுகு அணை நிரம்பியது. தற்போது கே.ஆர்.எஸ். அணையும் விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹேமாவதி, ஹாரங்கி அணைகளும் நிரம்பி வருகின்றன. இதனால் கர்நாடக அரசு அணைகளின் பாதுகாப்பு கருதி அங்கிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. 




ஒட்டுமொத்தமாக தற்போது விநாடிக்கு 85,000 கன அடி நீர் வரை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு அதிக அளவில் நீர் வரத் தொடங்கியுள்ளது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தற்போது விநாடிக்கு 50,000 கன அடி நீருக்கு மேல் திறந்து விடப்பட்டு வருகிறது. அதேபோல கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் விரைவில் நீர் திறப்பு விநாடிக்கு 1 லட்சம் கன அடியாக உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கேஆர்எஸ் அணைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கர்நாடகத்திலிருந்து  காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது விநாடிக்கு 71,777 கன அடி என்ற அளவில் நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.91 அடியாக உள்ளது. அணையின் முழுக் கொள்ளளவு 120 அடியாகும். கடந்த சில நாட்களாக தினசரி 8 முதல் 10 அடி வரை அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விரைவில் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்