பெங்களூரு: கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்கு காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக கே.ஆர்.எஸ். அணை நிரம்பப் போகிறது. இதனால் கர்நாடக காவிரி ஆறுகளில் விநாடிக்கு 85,000 கன அடி நீர் திறக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகாவில், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முதலில் கபிணி அணை நிரம்பியது. பிறகு நுகு அணை நிரம்பியது. தற்போது கே.ஆர்.எஸ். அணையும் விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹேமாவதி, ஹாரங்கி அணைகளும் நிரம்பி வருகின்றன. இதனால் கர்நாடக அரசு அணைகளின் பாதுகாப்பு கருதி அங்கிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக தற்போது விநாடிக்கு 85,000 கன அடி நீர் வரை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு அதிக அளவில் நீர் வரத் தொடங்கியுள்ளது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து தற்போது விநாடிக்கு 50,000 கன அடி நீருக்கு மேல் திறந்து விடப்பட்டு வருகிறது. அதேபோல கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் விரைவில் நீர் திறப்பு விநாடிக்கு 1 லட்சம் கன அடியாக உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கேஆர்எஸ் அணைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகத்திலிருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது விநாடிக்கு 71,777 கன அடி என்ற அளவில் நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.91 அடியாக உள்ளது. அணையின் முழுக் கொள்ளளவு 120 அடியாகும். கடந்த சில நாட்களாக தினசரி 8 முதல் 10 அடி வரை அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விரைவில் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}